Check out the new design

Ibisobanuro bya Quran Ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro. Isurat: Hud   Umurongo:

ஹூத்

Zimwe mu ntego z'iyi surat.:
تثبيت النبي والمؤمنين بقصص الأنبياء السابقين، وتشديد الوعيد للمكذبين.
முன்சென்ற நபிமார்களின் வரலாறுகள் மூலம் நபியவர்களை உறுதிப்படுத்தலும் மறுப்போருக்கான கடுமையான எச்சரிக்கையும்

الٓرٰ ۫— كِتٰبٌ اُحْكِمَتْ اٰیٰتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِیْمٍ خَبِیْرٍ ۟ۙ
11.1. (الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அல்குர்ஆன் வார்த்தையும் பொருளும் திறமையாக வடிவமைக்கபட்ட வசனங்களையுடைய ஒரு வேதமாகும். அதில் எவ்வித குறைபாட்டையும் நீர் காணமுடியாது. பின்னர் அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதவை, ஏவல், விலக்கல், வாக்குறுதி, எச்சரிக்கை, சம்பவங்கள் ஏனையவை ஆகியன, தனது திட்டமிடலிலும் சட்டமியற்றுவதிலும் ஞானம்மிக்க, அடியார்களின் நிலமைகளையும் அவர்களுக்கு பலனளிப்பவற்றையும் குறித்து நன்கறிந்த (இறை)வனால் எடுத்துரைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Ibisobanuro by'icyarabu:
اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— اِنَّنِیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ وَّبَشِیْرٌ ۟ۙ
11.2. முஹம்மதின் மீது இறக்கப்பட்ட வசனங்களின் உள்ளடக்கம்: “அல்லாஹ்வுடன் அவனைத் தவிர உள்ளவற்றையும் வணங்குவதை விட்டும் தடுப்பதாகும். -மனிதர்களே!- நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அவனுடைய தண்டனையை உங்களுக்கு அச்சமூட்டுபவனாகவும், நீங்கள் நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டால் அவனுடைய நற்கூலியைக் கொண்டு உங்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவனாகவும் நான் இருக்கின்றேன்.”
Ibisobanuro by'icyarabu:
وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّیُؤْتِ كُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَهٗ ؕ— وَاِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ كَبِیْرٍ ۟
11.3. -மக்களே!- உங்கள் இறைவனிடம் உங்கள் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருங்கள். அவன் விடயத்தில் நீங்கள் செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு அவன் பக்கம் திரும்புங்கள். இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணைகள் வரை அவன் உங்களை நல்ல முறையில் அனுபவிக்கச் செய்வான். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரிந்த ஒவ்வொருவருக்கும் அவன் குறைவின்றி நிறைவாக தன் அருளை வழங்கிடுவான். நான் என் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததன் மீது நம்பிக்கை கொள்ளாமல் நீங்கள் புறக்கணித்தால் உங்கள் மீது பயங்கரமான நாளான மறுமை நாளின் வேதனையைக் குறித்து அஞ்சுகிறேன்.
Ibisobanuro by'icyarabu:
اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ ۚ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
11.4. மக்களே! மறுமை நாளில் நீங்கள் அல்லாஹ் ஒருவனின் பக்கமே திரும்ப வேண்டும். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. எனவே உங்களை உயிர்ப்பிப்பதும் நீங்கள் மரணித்து உங்களை எழுப்பிய பின் விசாரணை செய்வதும் அவனால் இயலாத காரியமல்ல.
Ibisobanuro by'icyarabu:
اَلَاۤ اِنَّهُمْ یَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِیَسْتَخْفُوْا مِنْهُ ؕ— اَلَا حِیْنَ یَسْتَغْشُوْنَ ثِیَابَهُمْ ۙ— یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۚ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
11.5. அறிந்து கொள்ளுங்கள், இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைப் பற்றிய அறியாமையினால் ஏற்பட்ட தமது உள்ளங்களில் உள்ள அவனைப் பற்றிய சந்தேகத்தை மறைக்க தமது நெஞ்சுகளை வளைக்கிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்கள் தங்களின் தலைகளை ஆடைகளால் மறைக்கும் போது அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான். உள்ளங்களிலுள்ள எண்ணங்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
Ibisobanuro by'icyarabu:
Zimwe mu nyungu dukura muri Ayat kuri iyi paji.:
• إن الخير والشر والنفع والضر بيد الله دون ما سواه.
1. நலவும், கெடுதியும், பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. வேறுயாராலும் முடியாது.

• وجوب اتباع الكتاب والسُّنَّة والصبر على الأذى وانتظار الفرج من الله.
2. குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுவதும் அதில் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்வதும் அல்லாஹ்விடம் விடுதலையை எதிர்பார்ப்பதும் கட்டாயமாகும்.

• آيات القرآن محكمة لا يوجد فيها خلل ولا باطل، وقد فُصِّلت الأحكام فيها تفصيلًا تامَّا.
3. குர்ஆனின் வசனங்கள் தீர்க்கமானவை. அதில் குறைகளோ அசத்தியமோ காணப்படாது. அதில் சட்டங்கள் மிகவும் விபரமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

• وجوب المسارعة إلى التوبة والندم على الذنوب لنيل المطلوب والنجاة من المرهوب.
4.எதிர்பார்ப்பதை அடைந்து அஞ்சுவதை விட்டும் தப்புவதற்காக தவ்பாவின் பக்கமும் பாவங்களை விட்டு வருந்துவதன் பக்கமும் விரைவது அவசியமாகும்.

 
Ibisobanuro. Isurat: Hud
Urutonde rw'amasura Nimero ya Paji.
 
Ibisobanuro bya Quran Ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu. - Ishakiro ry'ibisobanuro

Byasohowe n'ikigo Tafsir of Quranic Studies.

Gufunga.