Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: Al-A‘rāf   Verse:
وَنَادٰۤی اَصْحٰبُ الْجَنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ؕ— قَالُوْا نَعَمْ ۚ— فَاَذَّنَ مُؤَذِّنٌ بَیْنَهُمْ اَنْ لَّعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ
7.44. சுவனவாசிகள், நரகவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தயார் செய்யப்பட்டுள்ள இடத்தில் நுழைந்த பிறகு சுவனவாசிகள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த சுவனத்தை நாங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டோம். அவன் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நிராகரிப்பாளர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த நரகத்தை நீங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டீர்களா?” அதற்கு நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த நரகத்தை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம்.” அப்பொழுது ஓர் அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்வார்: “அல்லாஹ் அநியாயக்காரர்களை தன் அருளை விட்டும் தூரமாக்குவானாக. உலக வாழ்வில் அல்லாஹ் தன் அருள் வாயில்களை அவர்களுக்காகத் திறந்து வைத்திருந்தான். ஆயினும் அவர்களை அவற்றை விட்டும் முகந்திருப்பிக் கொண்டார்கள்.
Arabic Tafsirs:
الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ۚ— وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَ ۟ۘ
7.45. இந்த அநியாயக்காரர்கள் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். சத்தியப் பாதை யாரும் செல்ல முடியாதவாறு கோணலாகிவிட வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். அவர்கள் மறுமை நாளை நிராகரித்தோர், அதற்கான தயாரிப்பில் ஈடுபடாதோர்.
Arabic Tafsirs:
وَبَیْنَهُمَا حِجَابٌ ۚ— وَعَلَی الْاَعْرَافِ رِجَالٌ یَّعْرِفُوْنَ كُلًّا بِسِیْمٰىهُمْ ۚ— وَنَادَوْا اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ سَلٰمٌ عَلَیْكُمْ ۫— لَمْ یَدْخُلُوْهَا وَهُمْ یَطْمَعُوْنَ ۟
7.46. சுவனவாசிகள், நரகவாசிகள் என்ற இந்த இரு பிரிவினருக்குமிடையே அஃராஃப் என்று அழைக்கப்படும் உயரமான ஒரு தடுப்பு உண்டு. அதன் மீது நற்செயல்களும் தீயசெயல்களும் சமமான சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் சுவனவாசிகளை அவர்களின் பொலிவான முக அடையாளங்களைக் கொண்டும், நரகவாசிகளை அவர்களின் கருமையான முக அடையாளங்களைக் கொண்டும் அறிந்துகெள்வார்கள். இவர்கள் சுவனவாசிகளை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களிடம், ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் அஃராபில் உள்ள அவர்கள் இன்னும் சுவனத்தில் நுழையவேயில்லை. அல்லாஹ்வின் அருளினால் அதில் நுழைவதை எதிர்பார்த்த வண்ணமே இருப்பார்கள்.
Arabic Tafsirs:
وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِ ۙ— قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠
7.47. அஃராப்வாசிகளின் பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் அவர்கள் அனுபவிக்கும் கடுமையான வேதனையைப் பார்த்து, “எங்கள் இறைவா! நிராகரித்து, இணைவைத்த இந்த அநியாயக்கார மக்களுடன் எங்களை ஆக்கிவிடாதே” என்று பிரார்த்தனை செய்வார்கள்.
Arabic Tafsirs:
وَنَادٰۤی اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا یَّعْرِفُوْنَهُمْ بِسِیْمٰىهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰی عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ۟
7.48. அஃராப்வாசிகள் நரகவாசிகளான சில நிராகரிப்பாளர்களை இருள் படிந்த அவர்களின் முக அடையாளங்களைக் கொண்டும் நீலம் பூத்த அவர்களின் கண்களைக் கொண்டும் அறிந்து கூறுவார்கள்: “நீங்கள் சேகரித்து வைத்த அதிகமான சொத்துக்களும் ஆட்களும் உங்களுக்குப் பயனளிக்கவில்லை. கர்வம் கொண்டு சத்தியத்தை நீங்கள் புறக்கணித்ததும் உங்களுக்குப் பயனளிக்கவில்லை.”
Arabic Tafsirs:
اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمْتُمْ لَا یَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍ ؕ— اُدْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَیْكُمْ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟
7.49. நிராகரிப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் கூறுவான்: “இவர்களைக் குறித்துதானே ‘அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரியவே மாட்டான்’ என்று சத்தியம் செய்து கூறினீர்கள்.” நம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் கூறுவான்: “நம்பிக்கையாளர்களே! நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடுங்கள். எதிர்காலத்தை எண்ணி உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உங்களுக்குக் கிடைக்கும் நிரந்தமான இன்பத்தினால் உங்களுக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காக நீங்கள் கவலையடையவும் மாட்டீர்கள்.”
Arabic Tafsirs:
وَنَادٰۤی اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَنَّةِ اَنْ اَفِیْضُوْا عَلَیْنَا مِنَ الْمَآءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ؕ— قَالُوْۤا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ
7.50. நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் கோரிக்கை வைத்தவர்களாகக் கூறுவார்கள்: “சொர்க்கவாசிகளே! எங்கள் மீது நீரை அள்ளி ஊற்றுங்கள். அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து எங்களுக்கும் வழங்குங்கள்.” சொர்க்கவாசிகள் கூறுவார்கள்: “நிராகரிப்பாளர்கள் நிராகரித்த காரணத்தால் அவையிரண்டையும் அவர்கள் மீது அல்லாஹ் தடைசெய்துள்ளான். அவன் உங்கள் மீது தடைசெய்தவற்றின் மூலம் நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவமாட்டோம்.
Arabic Tafsirs:
الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ— فَالْیَوْمَ نَنْسٰىهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ یَوْمِهِمْ هٰذَا ۙ— وَمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
7.51. இந்த நிராகரிப்பாளர்கள்தாம் தங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் ஆக்கினார்கள். உலக வாழ்வின் அலங்காரங்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது. அவர்கள் மறுமை நாளின் சந்திப்பை மறந்து அதற்காக செயல்படாமலும் தயாராகாமலும் இருந்ததைப் போலவும், அல்லாஹ்வின் சான்றுகளையும் ஆதாரங்களையும் உண்மையென அறிந்துகொண்டே அவற்றை நிராகரித்ததைப் போலவும் அல்லாஹ்வும் மறுமை நாளில் அவர்களை மறந்து, வேதனையில் சூழலுமாறு அவர்களை விட்டுவிடுவான்.
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• عدم الإيمان بالبعث سبب مباشر للإقبال على الشهوات.
1. மறுமை நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது இச்சைகளின் மீது மோகம் கொள்வதற்கான நேரடிக் காரணமாகும்.

• يتيقن الناس يوم القيامة تحقق وعد الله لأهل طاعته، وتحقق وعيده للكافرين.
2. அல்லாஹ் தன்னை வழிப்பட்டோருக்கு அளித்த வாக்குறுதியும் நிராகரிப்பாளர்களுக்கு வாக்களித்த எச்சரிக்கையும் உண்மையானதே என்பதை மக்கள் உறுதியாக மறுமை நாளில் அறிந்து கொள்வார்கள்.

• الناس يوم القيامة فريقان: فريق في الجنة وفريق في النار، وبينهما فريق في مكان وسط لتساوي حسناتهم وسيئاتهم، ومصيرهم إلى الجنة.
3. மறுமை நாளில் மனிதர்கள் சுவனவாசிகள், நரகவாசிகள் என்னும் இரு பிரிவினராக இருப்பார்கள். அவையிரண்டுக்குமிடையில் ஒரு மத்திய பகுதியில் நன்மைகளும் தீமைகளும் சமமாகிவிட்ட மூன்றாவது பிரிவினரும் இருப்பார்கள். அவர்களது முடிவு சுவர்க்கமே.

• على الذين يملكون المال والجاه وكثرة الأتباع أن يعلموا أن هذا كله لن يغني عنهم من الله شيئًا، ولن ينجيهم من عذاب الله.
4. பணம், பதவி மற்றும் தன்னைப் பின்பற்றும் பெரும் கூட்டத்தினரைப் பெற்றவர்கள், அவையனைத்தும் அல்லாஹ்விடம் எந்தப் பயனையும் அளிக்காது என்பதையும் அவை நரக வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

 
Translation of the Meanings Surah: Al-A‘rāf
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close