Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: At-Tawbah   Versetto:
وَّعَلَی الثَّلٰثَةِ الَّذِیْنَ خُلِّفُوْا ؕ— حَتّٰۤی اِذَا ضَاقَتْ عَلَیْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَیْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَیْهِ ؕ— ثُمَّ تَابَ عَلَیْهِمْ لِیَتُوْبُوْا ؕ— اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟۠
9.118. தபூக் போருக்கு தூதருடன் புறப்படாமல் பின்தங்கியதனால் பாவமன்னிப்பு ஏற்கப்படுவது பிற்போடப்பட்ட மூவர்களான கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீஃ, ஹிலால் இப்னு உமைய்யா ஆகியோரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். தூதர் அந்த மூவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மக்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். எந்த அளவுக்கெனில் பூமி விசாலமாக இருந்த போதும் அது அவர்களை நெருக்கடியாகி விட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட தனிமையினால் அவர்களது உள்ளங்கள நெருக்கடிக்குள்ளாகின. அல்லாஹ்வைத் தவிர வேறு எங்கும் அடைக்கலம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும் பாக்கியத்தை அளித்து அவர்கள் மீது கருணை காட்டினான். பின்னர் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். தனது அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Esegesi in lingua araba:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِیْنَ ۟
9.119. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றி அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். ஈமானிலும் சொல்லிலும் செயலிலும் உண்மையாளர்களுடன் இணைந்திடுங்கள். உங்களுக்கு உண்மையில்தான் வெற்றி அடங்கியுள்ளது.
Esegesi in lingua araba:
مَا كَانَ لِاَهْلِ الْمَدِیْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ یَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَلَا یَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ لَا یُصِیْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَطَـُٔوْنَ مَوْطِئًا یَّغِیْظُ الْكُفَّارَ وَلَا یَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّیْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟ۙ
9.120. மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புறவாசிகளுக்கும் அல்லாஹ்வின் தூதர் போருக்காகப் புறப்பட்டால் அவரை விட்டுப் பின்தங்குவதோ அவரின் உயிரைவிட தங்களின் உயிரை பெரிதாக எண்ணுவதோ உகந்ததல்ல. மாறாக அவர்கள் தூதருக்காக தம் உயிரை அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு, பசி மற்றும் நிராகரிப்பாளர்களை ஆத்திரமூட்டுவதற்காக அவர்களின் ஊர்களில் அவர்கள் எடுத்துவைக்கும் காலடிகள், எதிரிகளைக் கொல்லுதல், கைதிகளாகப் பிடித்தல், போர்ச் செல்வங்களையோ தோல்வியையோ பெறுதல் என ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களுக்கு நன்மை எழுதப்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கிவிடுவதில்லை. மாறாக அவன் அவர்களுக்கு அதனை முழுமையாகவும் இன்னும் அதிகமாகவும் வழங்கிவிடுகிறான்.
Esegesi in lingua araba:
وَلَا یُنْفِقُوْنَ نَفَقَةً صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً وَّلَا یَقْطَعُوْنَ وَادِیًا اِلَّا كُتِبَ لَهُمْ لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
9.121. அவர்கள் குறைவாகவோ அதிகமாகவோ எதைச் செலவு செய்தாலும் எந்த பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும் அவர்களுக்கு வெகுமதி வழங்கும் பொருட்டு அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் பயணத்திற்கும் தகுந்த கூலியை அல்லாஹ் அவர்களுக்கு எழுதிவிடுகிறான். மறுமை நாளில் அவர்கள் செய்துகொண்டிருந்த சிறந்த செயல்களுக்குரிய கூலியை வழங்கிடுவான்.
Esegesi in lingua araba:
وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِیَنْفِرُوْا كَآفَّةً ؕ— فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآىِٕفَةٌ لِّیَتَفَقَّهُوْا فِی الدِّیْنِ وَلِیُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَیْهِمْ لَعَلَّهُمْ یَحْذَرُوْنَ ۟۠
9.122. நம்பிக்கையாளர்கள் அனைவரும் போருக்குப் புறப்படுவது உகந்ததல்ல. ஏனெனில் எதிரிகளின் ஆதிக்கத்தால் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களில் ஒரு பிரிவினர் போருக்குப் புறப்பட்டு, ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து செவிமடுக்கும் குர்ஆன் மார்க்க சட்ட திட்டங்கள் மூலம் மார்க்கத்தில் தெளிவு பெற்று தங்களின் சமூகத்தார் திரும்பி வரும்போது தாம் கற்றவற்றைக் கொண்டு அவர்களை எச்சரிப்பதற்கு நபியவர்களுடன் தங்கிவிடக்கூடாதா? அல்லாஹ்வின் வேதனையை விட்டு எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதற்கும் அது வழிவகுக்கலாம். இது நபியவர்கள் அனுப்பிய சிறுசிறு படைகள் தொடர்பாக இறக்கப்பட்ட கட்டளையாகும். அவர்கள் தனது தோழர்களில் ஒரு பிரிவினரை தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்பார்கள்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• وجوب تقوى الله والصدق وأنهما سبب للنجاة من الهلاك.
1. அல்லாஹ்வை அஞ்சுவதும் உண்மை பேசுவதும் கட்டாயமாகும். அவை அழிவிலிருந்து தப்புவதற்கான காரணிகளாகும்.

• عظم فضل النفقة في سبيل الله.
2. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் சிறப்பின் மகத்துவம் தெளிவாகிறது.

• وجوب التفقُّه في الدين مثله مثل الجهاد، وأنه لا قيام للدين إلا بهما معًا.
3. மார்க்கத்தில் தெளிவு பெறுவது கட்டாயமாகும். அது போர் புரிவதற்குச் சமனாகும். அவையிரண்டின் மூலமே மார்க்கம் நிலைக்கும்.

 
Traduzione dei significati Sura: At-Tawbah
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi