Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: আন-নূৰ   আয়াত:
اِنَّ الَّذِیْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ ؕ— لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْ ؕ— بَلْ هُوَ خَیْرٌ لَّكُمْ ؕ— لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ ۚ— وَالَّذِیْ تَوَلّٰی كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِیْمٌ ۟
நிச்சயமாக இட்டுக்கட்டியவர்கள் உங்களில் உள்ள ஒரு குழுவினர்தான். அதை (இட்டுக்கட்டிய செய்தியை) உங்களுக்கு தீமையாக கருதாதீர்கள். மாறாக, அது உங்களுக்கு நன்மைதான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் பாவத்தில் அவர் செய்தது (-அதன் தண்டனை) உண்டு. அவர்களில் அதில் பெரியதை செய்தவர் (-இட்டுக் கட்டுவதில் பெரும் பங்களிப்பு வகித்தவர்) அவருக்கு பெரும் தண்டனை உண்டு.
আৰবী তাফছীৰসমূহ:
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَیْرًا ۙ— وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِیْنٌ ۟
நீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (தங்களில் இட்டுக்கட்டப்பட்டவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும் இது தெளிவான இட்டுக்கட்டாகும் (பொய்யாகும்) என்று சொல்லியிருக்க வேண்டாமா!
আৰবী তাফছীৰসমূহ:
لَوْلَا جَآءُوْ عَلَیْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ ۚ— فَاِذْ لَمْ یَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓىِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ ۟
அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா! ஆகவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வராததால் அவர்கள்தான் அல்லாஹ்விடம் பொய்யர்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِیْ مَاۤ اَفَضْتُمْ فِیْهِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۚ
உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் கருணையும் இம்மையிலும் மறுமையிலும் இல்லாதிருந்தால் நீங்கள் ஈடுபட்ட விஷயத்தில் உங்களுக்கு பெரிய தண்டனை கிடைத்திருக்கும்.
আৰবী তাফছীৰসমূহ:
اِذْ تَلَقَّوْنَهٗ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَّا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَیِّنًا ۖۗ— وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِیْمٌ ۟
ஏனெனில், நீங்கள் உங்கள் நாவுகளால் அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள். இன்னும் உங்கள் வாய்களால் உங்களுக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை கூறுகிறீர்கள், அதை மிக இலகுவாக கருதுகிறீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கிறது.
আৰবী তাফছীৰসমূহ:
وَلَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَا ۖۗ— سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِیْمٌ ۟
அதை நீங்கள் கேட்டபோது “இதை நாங்கள் பேசுவது எங்களுக்குத் தகாது, அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன், இது பெரிய அபாண்டமான பேச்சு” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா!
আৰবী তাফছীৰসমূহ:
یَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
இது போன்றதற்கு ஒரு போதும் நீங்கள் மீண்டும் வரக்கூடாது (இன்னொரு முறை இப்படிப்பட்ட காரியத்தை செய்யக்கூடாது). என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால்.
আৰবী তাফছীৰসমূহ:
وَیُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு (தனது) வசனங்களை விவரிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகாஞானவான் ஆவான்.
আৰবী তাফছীৰসমূহ:
اِنَّ الَّذِیْنَ یُحِبُّوْنَ اَنْ تَشِیْعَ الْفَاحِشَةُ فِی الَّذِیْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ— فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
நிச்சயமாக அசிங்கமான செயல் நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை விரும்பக்கூடியவர்கள் -அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வலி தரக்கூடிய தண்டனை உண்டு. அல்லாஹ்தான் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
அல்லாஹ் உடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவனாகவும் மகா கருணையுள்ளவனாகவும் இல்லாதிருந்தால் (நீங்கள் அழிந்து போயிருப்பீர்கள்.)
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: আন-নূৰ
ছুৰাসমূহৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

বন্ধ