للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: النحل   آية:
ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یُخْزِیْهِمْ وَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تُشَآقُّوْنَ فِیْهِمْ ؕ— قَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْیَ الْیَوْمَ وَالسُّوْٓءَ عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ
16.27. பின்னர் மறுமை நாளில் அல்லாஹ் அவர்களை வேதனையால் இழிவுபடுத்துவான். அவன் அவர்களிடம் கேட்பான்: “நீங்கள் வணக்கத்தில் எனக்கு இணையாக்கிக் கொண்டிருந்த எனக்கு நிகரானவர்கள் எங்கே? அவற்றினால்தானே என் தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் எதிர்த்துக் கொண்டிருந்தீர்கள்?” இறைவனுக்குக் கட்டுப்பட்ட அறிஞர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் இழிவும் வேதனையும் நிராகரிப்பாளர்களைத் தாக்கியே தீரும்.”
التفاسير العربية:
الَّذِیْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ ۪— فَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوْٓءٍ ؕ— بَلٰۤی اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
16.28. மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் அல்லாஹ்வை நிராகரித்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது தங்களைத் தாக்கும் மரணத்தைக் கண்டு அவர்கள் முழுமையாக சரணடைந்து விடுவார்கள். தமது நிராகரிப்பையும் பாவங்களையும் மறுப்பது தமக்குப் பயனளிக்கும் என நினைத்து அவற்றை அவர்கள் மறுப்பார்கள். அப்போது அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் பொய் கூறுகிறீர்கள். பாவங்கள் புரியும் நிராகரிப்பாளர்களாக இருந்தீர்கள். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
التفاسير العربية:
فَادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— فَلَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
16.29. அவர்களிடம் கூறப்படும்: “உங்களின் செயல்களுக்கேற்ப நரகத்தின் வாயில்களில் நுழைந்து என்றும் அதிலே நிரந்தரமாக தங்கிவிடுங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமல், அவனை மாத்திரம் வணங்காமல் கர்வம் கொண்டவர்களின் தங்குமிடமான அது மிகவும் மோசமானது.
التفاسير العربية:
وَقِیْلَ لِلَّذِیْنَ اتَّقَوْا مَاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْ ؕ— قَالُوْا خَیْرًا ؕ— لِلَّذِیْنَ اَحْسَنُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةٌ ؕ— وَلَدَارُ الْاٰخِرَةِ خَیْرٌ ؕ— وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِیْنَ ۟ۙ
16.30. தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களிடம், “உங்களின் இறைவன் உங்களின் தூதர் முஹம்மது மீது எதனை இறக்கினான்?” என்று கேட்கப்பட்டால், “அவன் அவர் மீது மிகப் பெரும் நன்மைமைகளை இறக்கியுள்ளான்” என்று விடையளிப்பர்கள். இவ்வுலகில் அல்லாஹ்வை சிறந்த முறையில் வணங்கி அவனுடைய படைப்புகளுடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர்களுக்கு வெற்றி, விசாலமான வாழ்வாதாரம் உட்பட நற்கூலி உண்டு. அல்லாஹ் அவர்களுக்காக மறுமையில் ஏற்பாடு செய்துள்ள கூலி இவ்வுலகில் அவர்களுக்கு உடனடியாக வழங்கியதை விட சிறந்ததாகும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு கிடைக்கும் மறுமையின் வீடு மிகவும் சிறப்பானது.
التفاسير العربية:
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ لَهُمْ فِیْهَا مَا یَشَآءُوْنَ ؕ— كَذٰلِكَ یَجْزِی اللّٰهُ الْمُتَّقِیْنَ ۟ۙ
16.31. நிலையான சுவனங்களில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் மாளிகைகளுக்கும், மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இந்த சுவனங்களில் அவர்களின் மனம் விரும்பும் உணவு, குடிபானம் மற்றும் ஏனையவை அத்தனையும் கிடைக்கும். முஹம்மதின் சமூகத்திலுள்ள இறையச்சமுடையோருக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே முந்தைய சமூகத்திலுள்ள இறையச்சமுடையோரும் கூலி வழங்கப்படுவார்கள்.
التفاسير العربية:
الَّذِیْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ طَیِّبِیْنَ ۙ— یَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَیْكُمُ ۙ— ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
16.32. மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் அவர்களின் உயிர்களை அவர்களின் உள்ளங்கள் நிராகரிப்பை விட்டும் தூய்மையாக இருக்கும் நிலையில் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் வானவர்கள் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நீங்கள் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் உலகில் கொண்டிருந்த சரியான நம்பிக்கையினாலும் செய்து கொண்டிருந்த நற்செயல்களினாலும் சுவனத்தில் நுழையுங்கள்.”
التفاسير العربية:
هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمُ الْمَلٰٓىِٕكَةُ اَوْ یَاْتِیَ اَمْرُ رَبِّكَ ؕ— كَذٰلِكَ فَعَلَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
16.33. பொய்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் திடீரென மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் இவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு இவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லது இவ்வுலகில் அவர்களை அடியோடு அழிக்கக் கூடிய வேதனையைத் தாங்கிய அல்லாஹ்வின் கட்டளையையா? மக்காவின் இந்த இணைவைப்பாளர்கள் செய்வதைப் போன்றே முன்னர் வாழ்ந்த இணைவைப்பாளர்களும் செய்தார்கள். அதனால் அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். அவன் அவர்களை அழித்து அவர்கள் மீது அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணங்களைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
التفاسير العربية:
فَاَصَابَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
16.34. அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களின் தண்டனைகள் அவர்கள் மீது இறங்கின. எந்த வேதனையைக் குறித்து நினைவூட்டப்படும் போது அதனைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தனரோ அந்த வேதனை அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• فضيلة أهل العلم، وأنهم الناطقون بالحق في الدنيا ويوم يقوم الأشهاد، وأن لقولهم اعتبارًا عند الله وعند خلقه.
1. அறிஞர்களின் சிறப்பு தெளிவாகிறது. அவர்கள் இவ்வுலகிலும் சாட்சிகள் நிலை பெறும் மறுமை நாளிலும் சத்தியத்தைக் கொண்டு பேசுவார்கள். அவர்களின் வார்த்தைக்கு அல்லாஹ்விடத்திலும் படைப்புகளிடத்திலும் மதிப்பு உண்டு.

• من أدب الملائكة مع الله أنهم أسندوا العلم إلى الله دون أن يقولوا: إنا نعلم ما كنتم تعملون، وإشعارًا بأنهم ما علموا ذلك إلا بتعليم من الله تعالى.
2. நீங்கள் செய்துகொண்டிருந்ததை நாங்கள் அறிவோம் என்று வானவர்கள் கூறாமல் அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான் எனக் கூறியமை அல்லாஹ்வுடன் அவர்கள் பேணும் ஒழுக்கமாகும். நிச்சயமாக அதை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர அவர்கள் அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் விதமாகவே அவ்வாறு கூறுகின்றனர்.

• من كرم الله وجوده أنه يعطي أهل الجنة كل ما تمنوه عليه، حتى إنه يُذَكِّرهم أشياء من النعيم لم تخطر على قلوبهم.
3. சுவனவாதிகள் ஆசைவைக்கும் அனைத்தையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்குவது அவனது கொடையாகும். எந்தளவுக்கெனில் அவர்களது உள்ளங்களில் தோன்றாத இன்பங்களையும் அவர்களுக்கு அவன் நினைவூட்டுவான்.

• العمل هو السبب والأصل في دخول الجنة والنجاة من النار، وذلك يحصل برحمة الله ومنَّته على المؤمنين لا بحولهم وقوتهم.
4. சுவனத்தில் நுழைவதற்கும் நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் அடிப்படையும் காரணமாக அமைவதும் செயல்களே. அது நம்பிக்கையாளர்களின் மீது அல்லாஹ் காட்டும் கருணையினாலும் அருளினாலுமே ஏற்படுமே அன்றி அவர்களது பலத்தினாலோ ஆற்றலினாலோ அல்ல.

 
ترجمة معاني سورة: النحل
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق