Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አር-ረዕድ   አንቀፅ:
مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ— تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— اُكُلُهَا دَآىِٕمٌ وَّظِلُّهَا ؕ— تِلْكَ عُقْبَی الَّذِیْنَ اتَّقَوْا ۖۗ— وَّعُقْبَی الْكٰفِرِیْنَ النَّارُ ۟
13.35. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் வாக்களித்த சுவனத்தின் தன்மையானது, அதன் மாளிகைகளுக்கும், மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் பழங்கள் உலகத்தில் இருக்கும் பழங்களை போல் அல்லாமல் என்றும் முடிவடையாதது. அதன் நிழல்கள் நிலையானது, அகன்று விடாதது, குறையாதது. இந்த முடிவு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கே ஆகும். நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவு நரகமேயாகும். அங்கு நிரந்தரமாக அவர்கள் நுழைவார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
وَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَفْرَحُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ یُّنْكِرُ بَعْضَهٗ ؕ— قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖ ؕ— اِلَیْهِ اَدْعُوْا وَاِلَیْهِ مَاٰبِ ۟
13.36. -தூதரே!- நாம் தவ்ராத்தை வழங்கிய யூதர்களும் இன்ஜீலை வழங்கிய கிறிஸ்தவர்களும் உம்மீது இறக்கப்பட்டதைக் கொண்டு அது அவர்களுக்கு இறக்கப்பட்ட சிலவற்றுடன் ஒத்துப் போவதால் மகிழ்ச்சியடைகிறார்கள். யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் சிலர் அவர்களின் மன இச்சையோடு ஒத்துப் போகாத அல்லது திரிபுபடுத்தியாக அவர்களை வர்ணிக்கும் உமக்கு இறக்கப்பட்ட சிலவற்றை நிராகரிக்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் பக்கமே நான் அழைக்கின்றேன். வேறு யாரையும் நான் அழைக்க மாட்டேன். அவனிடமே நான் திரும்ப வேண்டும். இதைக் கொண்டுதான் தவ்ராத்தும் இன்ஜீலும் வந்தன.
ዓረብኛ ተፍሲሮች:
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِیًّا ؕ— وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ— مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا وَاقٍ ۟۠
13.37. -தூதரே!- முந்தைய வேதங்களை அந்தந்த மக்களின் மொழிகளிலேயே நாம் இறக்கியது போன்று உம்மீதும் குர்ஆனை, சத்தியத்தை தெளிவுபடுத்தக்கூடியதாக அரபி மொழியில் இறக்கினோம். -தூதரே!- அல்லாஹ் உமக்குக் கற்றுக் கொடுத்த தெளிவான அறிவு உம்மிடம் வந்த பின்னரும் தமது மன இச்சைக்கு ஒத்துவராதவற்றை நீக்குமாறு வேதக்காரர்கள் பேரம் பேசுவதில் அவர்களின் மன இச்சையை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றும் பாதுகாவலர்களோ உம் எதிரிகளுக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவர்களோ யாரும் இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து உம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.
ዓረብኛ ተፍሲሮች:
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّیَّةً ؕ— وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— لِكُلِّ اَجَلٍ كِتَابٌ ۟
13.38. -தூதரே!- உமக்கு முன்னரும் நாம் மனிதர்களிலிருந்து பல தூதர்களை அனுப்பியுள்ளோம். தூதர்களில் நீர் ஒன்றும் புதுமையானவர் அல்ல. மற்ற மனிதர்களைப் போன்று அவர்களுக்கும் மனைவியரையும் பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம். மணமுடிக்காத, பிள்ளை பெறாத வானவர்களாக நாம் அவர்களை ஆக்கவில்லை. நீரும் மணமுடித்து, பிள்ளைகள் பெறும் இந்த மனிதத் தூதர்களில் ஒருவரே. பின்னர் எதற்காக நீர் அவ்வாறிருப்பதைப் பார்த்து இணைவைப்பாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்?! அல்லாஹ் அனுமதித்தாலேயன்றி எந்த தூதரும் தன் புறத்திலிருந்து சான்றினைக் கொண்டுவர மாட்டார். அல்லாஹ் விதித்த ஒவ்வொரு விஷயத்திற்கும் அது குறிக்கப்பட்ட ஓர் ஏடு உண்டு. மேலும் முந்தவோ பிந்தவோ செய்யாத ஒரு தவணையும் உண்டு.
ዓረብኛ ተፍሲሮች:
یَمْحُوا اللّٰهُ مَا یَشَآءُ وَیُثْبِتُ ۖۚ— وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ ۟
13.39. அல்லாஹ் தான் நீக்குவதற்கு நாடிய நன்மையையோ, அல்லது தீமையையோ அல்லது பாக்கியத்தையோ அல்லது துர்பாக்கியத்தையோ, வேறு ஒன்றையோ நீக்கிவிடுகிறான். அவற்றில் தான் நாடியதை நிலைபெறச் செய்கிறான். அவனிடத்தில் லவ்ஹுல் மஹ்பூல் எனும் ஏடு இருக்கின்றது. அவை அனைத்தின் மூலம் அதுவே. அழித்தலோ அல்லது பதிவதோ அனைத்தும் அதிலுள்ளதற்கு ஒத்து வருபவையே.
ዓረብኛ ተፍሲሮች:
وَاِنْ مَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ وَعَلَیْنَا الْحِسَابُ ۟
13.40. -நபியே!- உம்மை மரணிக்கச் செய்வதற்கு முன்னரே நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையில் சிலவற்றை உமக்குக் காட்டினாலும் அது எம்மைச் சார்ந்ததே. அல்லது அதற்கு முன்னரே உம்மை மரணிக்கச் செய்துவிட்டாலும் நாம் கட்டளையிட்டதை எடுத்துரைப்பது மட்டுமே உம்மீதுள்ள கடமையாகும். அவர்களுக்குக் கூலி அளிப்பதோ, கணக்கு தீர்ப்பதோ உம்மீது கடமையல்ல. அது நம்மீதுள்ள கடமையாகும்.
ዓረብኛ ተፍሲሮች:
اَوَلَمْ یَرَوْا اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ— وَاللّٰهُ یَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ ؕ— وَهُوَ سَرِیْعُ الْحِسَابِ ۟
13.41. இஸ்லாத்தை பரவச் செய்து, முஸ்லிம்கள் அவற்றை வெற்றி கொள்வதன் மூலம் நிராகரிக்கும் நிலத்தின் பகுதிகளை குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதை இந்த நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் தன் அடியார்களிடையே தான் நாடியவாறு தீர்ப்பளிக்கிறான். எவராலும் அவனுடைய தீர்ப்பை நீக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அவன் விசாரணை செய்வதில் விரைவானவன். முன்னோர்கள், பின்னோர்களை ஒரே நாளில் விசாரணை செய்து விடுவான்.
ዓረብኛ ተፍሲሮች:
وَقَدْ مَكَرَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِیْعًا ؕ— یَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ؕ— وَسَیَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَی الدَّارِ ۟
13.42. முந்தைய சமூக மக்களும் தங்களின் தூதர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தார்கள். தூதர்களுக்கு அவர்கள் செய்த சதியினால் என்ன சாதித்தார்கள்? ஒன்றுமேயில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் திட்டங்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வல்லது. அனைத்து படைப்பினங்களின் செயல்களையும் அவன் அறிந்து வைத்துள்ளான். அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறையமுடியாது. அச்சமயத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலிருந்ததனால் தாம் எவ்வளவு பெரும் தவறிழைத்தவர்கள், நம்பிக்கையாளர்கள் எவ்வளவு சரியானவர்களாக இருந்து சுவனத்தையும் நல்ல முடிவையும் கூலியாகப் பெற்றுள்ளார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الترغيب في الجنة ببيان صفتها، من جريان الأنهار وديمومة الرزق والظل.
1. நதிகள் ஓடுதல், நிலையான வாழ்வாதாரம், நிழல் ஆகிய வர்ணனைகள் கூறப்பட்டு சுவனத்தை ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

• خطورة اتباع الهوى بعد ورود العلم وأنه من أسباب عذاب الله.
2. அறிந்த பின்னரும் மன இச்சையைப் பின்பற்றுவது பாரதூரமானது. அல்லாஹ்வின் வேதனைக்கான காரணிகளில் ஒன்றாகும்.

• بيان أن الرسل بشر، لهم أزواج وذريات، وأن نبينا صلى الله عليه وسلم ليس بدعًا بينهم، فقد كان مماثلًا لهم في ذلك.
3. தூதர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்கு மனைவியரும் பிள்ளைகளும் இருந்தார்கள். நம்முடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களில் புதுமையானவர் அல்ல. அந்த விடயத்தில் முன்சென்ற தூதர்களைப் போலவே இருந்தார்கள். என்ற விடயம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

 
የመልዕክት ትርጉም ሱራ (ምዕራፍ): አር-ረዕድ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት