Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûretu'l-Hadîd   Ayet:
هُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ— یَعْلَمُ مَا یَلِجُ فِی الْاَرْضِ وَمَا یَخْرُجُ مِنْهَا وَمَا یَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعْرُجُ فِیْهَا ؕ— وَهُوَ مَعَكُمْ اَیْنَ مَا كُنْتُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
57.4. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அது ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அவன் கண்சிமிட்டும் நேரத்தை விட குறுகிய நேரத்தில் அவற்றைப் படைப்பதற்கு சக்தியுடையவன்தான். பின்னர் அவன் அர்ஷின்மீது தன் கண்ணியத்திற்கேற்ப உயர்ந்து விட்டான். பூமியில் நுழையக்கூடிய மழைநீர், விதை, ஏனையவை, அதிலிருந்து வெளிப்படக்கூடிய தாவரங்கள், கனிமங்கள், ஏனையவை, வானத்திலிருந்து இறங்கக்கூடிய மழை, வஹி, ஏனையவை, அதன்பால் ஏறக்கூடிய வானவர்கள், அடியார்களின் செயல்கள் மற்றும் ஆன்மாக்கள் ஆகிய அனைத்தையும் அவன் அறிகிறான். -மனிதர்களே!- நீங்கள் எங்கிருந்த போதிலும் தன் அறிவால் அவன் உங்களுடேனேயே இருக்கின்றான். உங்களின் எந்த விடயமும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் செய்பவற்றை அவன் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Arapça tefsirler:
لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
57.5. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் பக்கம் மட்டுமே விவகாரங்கள் திரும்புகின்றன. அவன் மறுமை நாளில் படைப்புகள் அனைவரையும் விசாரணை செய்வான். அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arapça tefsirler:
یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؕ— وَهُوَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
57.6. அவன் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்கிறான். அதனால் இருள் பரவி மக்கள் தூங்கி விடுகிறார்கள். பகலை இரவின்மீது பிரவேசிக்கச் செய்கிறான். அதனால் பிரகாசம் ஏற்பட்டு மக்கள் தங்களின் பணிகளுக்குச் செல்கிறார்கள். அவன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arapça tefsirler:
اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَكُمْ مُّسْتَخْلَفِیْنَ فِیْهِ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِیْرٌ ۟
57.7. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைப் பிரதிநிதிகளாக்கிய செல்வங்களை அவன் உங்களுக்கு அளித்த மார்க்கத்தின்படி அதனைக் கையாளுங்கள், செலவு செய்யுங்கள். உங்களில் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு தங்களின் செல்வங்களை அவனுடைய பாதையில் செலவு செய்தவர்களுக்கு அவனிடத்தில் சுவனம் என்னும் மகத்தான கூலி உண்டு.
Arapça tefsirler:
وَمَا لَكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۚ— وَالرَّسُوْلُ یَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِیْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
57.8. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ள விடாமல் உங்களைத் தடுப்பது எது? நீங்கள் உங்கள் இறைவனின்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதற்காக தூதர் அவன் பக்கம் உங்களை அழைக்கின்றார். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவன் உங்களை உங்களின் தந்தையரின் முதுகுகளிலிருந்து வெளிப்படுத்திய சமயத்தில் நீங்கள் அவன்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும் என்று அவன் உங்களிடம் வாக்குறுதியைப் பெற்றுள்ளான்.
Arapça tefsirler:
هُوَ الَّذِیْ یُنَزِّلُ عَلٰی عَبْدِهٖۤ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ لِّیُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ— وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
57.9. உங்களை நிராகரிப்பு, அறியாமை என்னும் இருள்களிலிருந்து வெளியேற்றி ஈமான், அறிவு என்னும் ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக அவனே தன் அடியார் முஹம்மதுமீது தெளிவான சான்றுகளை இறக்குகிறான். நிச்சயமாக அல்லாஹ் தன் தூதரை நேர்வழிகாட்டக்கூடியவராகவும் நற்செய்தி கூறக்கூடியவராகவும் உங்களின்பால் அனுப்பி உங்களோடு மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
Arapça tefsirler:
وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— لَا یَسْتَوِیْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقٰتَلَ ؕ— اُولٰٓىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِیْنَ اَنْفَقُوْا مِنْ بَعْدُ وَقَاتَلُوْاؕ— وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠
57.10. அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்க விடாமல் உங்களைத் தடுப்பது எது? வானங்கள் மற்றும் பூமிக்கு அவனே சொந்தக்காரனாவான். -நம்பிக்கையாளர்களே!- உங்களில் மக்கா வெற்றிக்கு முன்னரே அல்லாஹ்வின் திருப்தியை நாடி தங்களின் செல்வங்களை செலவு செய்து இஸ்லாத்தின் வெற்றிக்காக நிராகரிப்பாளர்களுடன் போரிட்டவர்களும், மக்கா வெற்றிக்குப் பிறகு செலவு செய்தவர்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர்களும் சமமாகமாட்டார்கள். மக்கா வெற்றிக்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் தங்களின் செல்வங்களை செலவு செய்தவர்களும் போரிட்டவர்களும் அதற்குப் பின் செலவளித்து போரிட்டவர்களை விட அவனிடத்தில் உயர்ந்த படித்தரங்களைப் பெற்றவர்களாவர். அல்லாஹ் இரு பிரிவினருக்கும் சுவனத்தை வாக்களித்துள்ளான். அவன் நீங்கள் செய்யக்கூடியதை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Arapça tefsirler:
مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِیْمٌ ۟
57.11. யார் தம் செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியை நாடி மனத்திருப்தியுடன் செலவு செய்வார்களோ அவர்களுக்கு அவன் அவர்கள் செலவழித்ததற்குப் பகரமாக பலமடங்கு கூலியை வழங்கிடுவான். அவர்களுக்கு மறுமை நாளில் சுவனம் என்னும் கண்ணியமான கூலியும் உண்டு.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• المال مال الله، والإنسان مُسْتَخْلَف فيه.
1. செல்வம் அல்லாஹ்வுக்குரியது. மனிதன் அதற்கு பிரதிநிதியாகத்தான் ஆக்கப்பட்டுள்ளான்.

• تفاوت درجات المؤمنين بحسب السبق إلى الإيمان وأعمال البر.
2. நம்பிக்கை, நற்செயல்கள் ஆகியவற்றின்பால் முந்துவதற்கேற்ப நம்பிக்கையாளர்களின் படித்தரங்கள் வேறுபடும்.

• الإنفاق في سبيل الله سبب في بركة المال ونمائه.
3. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது செல்வங்களில் பரக்கத்தும் அபிவிருத்தியும் ஏற்படக் காரணமாகும்.

 
Anlam tercümesi Sure: Sûretu'l-Hadîd
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat