Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûratu Meryem   Ayet:
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖ ؕ— هَلْ تَعْلَمُ لَهٗ سَمِیًّا ۟۠
19.65. வானங்களையும், பூமியையும், அவையிரண்டிற்கு இடையிலுள்ளவற்றையும் படைத்தவனும், அவற்றின் அதிபதியும், அவற்றை நிர்வகிப்பவனுமாகிய அந்த இறைவனை மட்டுமே வணங்குவீராக. அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனை வணங்குவதில் உறுதியாக நிலைத்திருப்பீராக. வணக்கத்திலே அவனுக்கு கூட்டு சேரக்கூடிய ஒப்பான, நிகரானவர் யாரும் இல்லை.
Arapça tefsirler:
وَیَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَیًّا ۟
19.66. மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளன் பரிகாசமாகக் கூறுகிறான்: “நான் இறந்துவிட்டால் என் கப்ரிலிருந்து மீண்டும் இரண்டாவது தடவையாக உயிர்கொடுத்து எழுப்பப்படுவேனா? நிச்சயமாக இது சாத்தியமற்றது.”
Arapça tefsirler:
اَوَلَا یَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ یَكُ شَیْـًٔا ۟
19.67. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் இவன், முன்னர் அவன் எதுவாகவும் இல்லாமல் இருந்த நிலையில் நாம் அவனைப் படைத்தோம் என்பதை நினைத்துப் பார்க்கவில்லையா? இரண்டாவதாகப் படைக்க முடியும் என்பதற்கு முதலில் படைத்ததை ஆதாரமாகக் கொள்ளமாட்டானா. நிச்சயமாக இரண்டாவதாகப் படைப்பது மிகவும் எளிதானது.
Arapça tefsirler:
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّیٰطِیْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِیًّا ۟ۚ
19.68. -தூதரே!- உம் இறைவனின் மீது ஆணையாக, நிச்சயமாக அவர்களை கப்ருகளிலிருந்து, அவர்களை வழிகெடுத்த அவர்களின் ஷைத்தான்களோடு அவர்களை மஹ்ஸர் மைதானத்தில் வெளியேற்றி, பின்பு அவர்களை முழங்காளிட வைத்து இழிவுபடுத்தி நரகத்தின் வாயில்களை நோக்கி இழுத்துச் சென்றே தீருவோம்.
Arapça tefsirler:
ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِیْعَةٍ اَیُّهُمْ اَشَدُّ عَلَی الرَّحْمٰنِ عِتِیًّا ۟ۚ
19.69. பின்னர் வழிகெட்ட ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் பாவம் புரிவதில் தீவிரமாக இருந்த அவர்களது தலைவர்களை கடுமையாக இழுத்தெடுப்போம்.
Arapça tefsirler:
ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِیْنَ هُمْ اَوْلٰی بِهَا صِلِیًّا ۟
19.70. பின்பு நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பதற்குத் தகுதியானவர்களை நாம் நன்கறிவோம்.
Arapça tefsirler:
وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ— كَانَ عَلٰی رَبِّكَ حَتْمًا مَّقْضِیًّا ۟ۚ
19.71. -மனிதர்களே!- உங்களிலுள்ள ஒவ்வொருவரும் நரகத்தின் மீதுள்ள அந்த பாதையை கடந்தே தீர வேண்டும். அவ்வாறு கடப்பது அல்லாஹ் ஏற்படுத்திய விதியாகும். அவனுடைய விதியை யாராலும் மாற்ற முடியாது.
Arapça tefsirler:
ثُمَّ نُنَجِّی الَّذِیْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِیْنَ فِیْهَا جِثِیًّا ۟
19.72. இவ்வாறு பாதையை கடந்த பிறகு தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களை நாம் பாதுகாத்திடுவோம். அநியாயக்காரர்களை மண்டியிட்டவர்களாக அப்படியே விட்டு விடுவோம். அவர்களால் அதிலிருந்து தப்ப முடியாது.
Arapça tefsirler:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْۤا ۙ— اَیُّ الْفَرِیْقَیْنِ خَیْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِیًّا ۟
19.73. நம் தூதர் மீது இறக்கப்பட்ட தெளிவான நம் வசனங்கள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்: “இரு பிரிவினரில் யார் நல்ல வசிப்பிடத்தையும், தங்குமிடத்தையும் பெற்றுள்ளார்கள்? யாருடைய சபையும், கூட்டமும் சிறந்தது? எங்களின் கூட்டத்தினரா? அல்லது உங்களின் கூட்டத்தினரா?”
Arapça tefsirler:
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِﺋْﻴًﺎ ۟
19.74. தம்மிடமுள்ள சடரீதியான முன்னேற்றத்தைக் கொண்டு பெருமையடிக்கும் இந்த நிராகரிப்பாளர்களுக்கு முன்னால் நாம் அழித்த எத்தனையோ சமூகங்கள் உள்ளன! அவர்கள் இவர்களைவிட அதிக செல்வமுடையவர்களாவும் பெறுமதியான ஆடை மற்றும் உடம்பு ஆகியவற்றால் அழகிய தோற்றமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
Arapça tefsirler:
قُلْ مَنْ كَانَ فِی الضَّلٰلَةِ فَلْیَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ۬— حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ۬— فَسَیَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ۟
19.75. -தூதரே!- நீர் கூறுவீராக: “யார் வழிகேட்டில் தடுமாறித் திரிகிறாரோ அவர் மென்மேலும் வழிகெட வேண்டுமென்பதற்காக அளவிலாக் கருணையாளன் அவருக்கு அவகாசம் வழங்குவான். அவர்கள் இவ்வுலகில் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட விரைவான வேதனையையோ மறுமை நாளில் தாமதமான வேதனையையோ கண்ணால் காணும் போது தீய வசிப்பிடத்தையும் குறைவான உதவியாளர்களையும் பெற்றவர்கள் நம்பிக்கையாளர்களின் கூட்டமா? அல்லது அவர்களின் கூட்டமா? என்பதை அறிந்துகொள்வார்கள்.
Arapça tefsirler:
وَیَزِیْدُ اللّٰهُ الَّذِیْنَ اهْتَدَوْا هُدًی ؕ— وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ مَّرَدًّا ۟
19.76. அவர்கள் மென்மேலும் வழிகெட்டுச் செல்ல வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு அவன் அவகாசம் அளிப்பதுபோல நேர்வழிபெற்றவர்களின் நம்பிக்கையையும், கீழ்ப்படிதலையும் அவன் அதிகரிக்கச் செய்கிறான். -தூதரே!- நிரந்தர சந்தோசத்தின்பால் இட்டுச் செல்லும் நற்செயல்களே உம் இறைவனிடத்தில் பயனுள்ள கூலியையும், சிறந்த முடிவையும் பெற்றுத்தரக்கூடியதாகும்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• على المؤمنين الاشتغال بما أمروا به والاستمرار عليه في حدود المستطاع.
1. நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்ட செயல்களில் ஈடுபட வேண்டும். தங்களால் இயன்ற அளவு அதில் நிலைத்திருக்க வேண்டும்.

• وُرُود جميع الخلائق على النار - أي: المرور على الصراط، لا الدخول في النار - أمر واقع لا محالة.
2. படைப்புகள் அனைத்தும் நரகத்தின் மேலுள்ள(ஸிராத் எனும்) பாதையைக் கடக்க வேண்டுமென்பது -அதாவது அதன் மேல் கடப்பது மாறாக நரகில் நுழைவதல்ல-சந்தேகமில்லாமல் நடந்தே தீரும்.

• أن معايير الدين ومفاهيمه الصحيحة تختلف عن تصورات الجهلة والعوام.
3. நிச்சயமாக மார்க்கத்தின் அளவுகோல்கள், அதன் சரியான கருத்தாக்கங்கள் என்பன அறிவீனர்களினதும், பொதுமக்களினதும் சிந்தனைகளுக்கு மாற்றமானவையாகும்.

• من كان غارقًا في الضلالة متأصلًا في الكفر يتركه الله في طغيان جهله وكفره، حتى يطول اغتراره، فيكون ذلك أشد لعقابه.
4. யார் வழிகேட்டில் மூழ்கி நிராகரிப்பில் புரள்கிறானோ அவனது அறியாமை மற்றும் நிராகரிப்பு ஆகிய எல்லை மீறலில் அல்லாஹ் அவனை விட்டுவிடுகிறான். அவனது ஏமாற்றம் நீடித்து அவனது தண்டனை கடினமாவதற்காக அவ்வாறு செய்கிறான்.

• يثبّت الله المؤمنين على الهدى، ويزيدهم توفيقًا ونصرة، وينزل من الآيات ما يكون سببًا لزيادة اليقين مجازاةً لهم.
5. அல்லாஹ் விசுவாசிகளை நேர்வழியின் மீது உறுதிப்படுத்துகிறான். அவர்களுக்கு மென்மேலும் உதவி செய்கிறான். அவர்களுக்கான கூலியாக உறுதியை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கக்கூடிய அத்தாட்சிகளை அவன் இறக்குகின்றான்.

 
Anlam tercümesi Sure: Sûratu Meryem
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat