Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - Indise ng mga Salin

XML CSV Excel API
Please review the Terms and Policies

Salin ng mga Kahulugan Sūrah: An-Nisā’   Ayah:
وَالَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ ؕ— وَمَنْ یَّكُنِ الشَّیْطٰنُ لَهٗ قَرِیْنًا فَسَآءَ قَرِیْنًا ۟
இன்னும் (அவர்கள்) மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்பவர்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் நண்பனால் மிகக் கெட்டுவிட்டான்.
Ang mga Tafsir na Arabe:
وَمَاذَا عَلَیْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ؕ— وَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِیْمًا ۟
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்கள் மீது என்னதான் (பாதிப்பு ஏற்படும்)? அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Ang mga Tafsir na Arabe:
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚ— وَاِنْ تَكُ حَسَنَةً یُّضٰعِفْهَا وَیُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِیْمًا ۟
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான்.
Ang mga Tafsir na Arabe:
فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ بِشَهِیْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا ۟ؕؔ
(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வந்தால் இன்னும் உம்மை இவர்கள் மீது சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களின் நிலைமை) எவ்வாறிருக்கும்?
Ang mga Tafsir na Arabe:
یَوْمَىِٕذٍ یَّوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰی بِهِمُ الْاَرْضُ ؕ— وَلَا یَكْتُمُوْنَ اللّٰهَ حَدِیْثًا ۟۠
(அல்லாஹ்வை) நிராகரித்து, தூதருக்கு மாறு செய்தவர்கள் அவர்களுடன் பூமி சமமாக்கப்பட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு செய்தியையும் மறைக்கமாட்டார்கள்.
Ang mga Tafsir na Arabe:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكٰرٰی حَتّٰی تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیْ سَبِیْلٍ حَتّٰی تَغْتَسِلُوْا ؕ— وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا ۟
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவதை அறியும் வரை நீங்கள் போதை ஏறியவர்களாக இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள். இன்னும் (நீங்கள்) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). (ஆனால்) பயணிகளாக இருந்தால் தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாக அல்லது பயணத்தில் இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் (கழித்து) வந்தால் அல்லது பெண்களோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற்றுக்கொள்ள வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழைபொறுப்பவனாக, அதிகம் மன்னிப்பவனாக இருக்கிறான்.
Ang mga Tafsir na Arabe:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَیُرِیْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِیْلَ ۟ؕ
(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை பார்க்கவில்லையா? வழிகேட்டை விலைக்கு வாங்குகிறார்கள்; நீங்கள் (நேர்)வழி தவறுவதை நாடுகின்றனர்.
Ang mga Tafsir na Arabe:
 
Salin ng mga Kahulugan Sūrah: An-Nisā’
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - Indise ng mga Salin

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

Pagsasara