Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கமர்   வசனம்:

அல்கமர்

اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ۟
(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது,
அரபு விரிவுரைகள்:
وَاِنْ یَّرَوْا اٰیَةً یُّعْرِضُوْا وَیَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ ۟
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) புறக்கணிக்கிறார்கள்; இன்னும், (இது) இல்லாமல் போகும் மந்திரமாகும் என்றும் கூறுகிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ ۟
இன்னும், அவர்கள் பொய்ப்பித்தனர்; தங்கள் கெட்ட ஆசைகளை பின்பற்றினார்கள். எல்லாக் காரியங்களும் (அவற்றுக்குரிய இடத்தில்) நிலையாகத் தங்கக் கூடியதுதான். (நன்மை, நல்லவர்களை சொர்க்கத்தில் தங்க வைக்கும். பாவம், பாவிகளை நரகத்தில் தங்க வைக்கும்.)
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِیْهِ مُزْدَجَرٌ ۟ۙ
திட்டவட்டமாக எச்சரிக்கை உள்ள செய்திகள் அவர்களிடம் வந்துவிட்டன.
அரபு விரிவுரைகள்:
حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ ۟ۙ
மிக ஆழமான ஞானம் (-இந்த குர்ஆன் அவர்களிடம்) வந்திருக்கிறது. ஆக, எச்சரிப்பாளர்கள் (பலர் எச்சரித்தும் அவர்களுக்கு அவர்கள்) பலனளிக்க முடியவில்லை.
அரபு விரிவுரைகள்:
فَتَوَلَّ عَنْهُمْ ۘ— یَوْمَ یَدْعُ الدَّاعِ اِلٰی شَیْءٍ نُّكُرٍ ۟ۙ
ஆகவே, அவர்களை விட்டு நீர் விலகி விடுவீராக! அழைப்பாளர் மிக கடினமான ஒன்றை நோக்கி (-மறுமையின் மைதானத்தை நோக்கியும் அதன் விசாரணையை நோக்கியும்) அழைக்கின்ற நாளில்,
அரபு விரிவுரைகள்:
خُشَّعًا اَبْصَارُهُمْ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ ۟ۙ
அவர்களது பார்வைகள் இழிவடைந்த நிலையில், (கூட்டமாக) பரவி வரக்கூடிய வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளை விட்டு (விரைந்து) வெளியேறுவார்கள்.
அரபு விரிவுரைகள்:
مُّهْطِعِیْنَ اِلَی الدَّاعِ ؕ— یَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا یَوْمٌ عَسِرٌ ۟
அழைப்பாளரை நோக்கி பணிவுடன், பயத்துடன், விரைந்தவர்களாக வருவார்கள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இது ஒரு சிரமமான நாளாகும்.”
அரபு விரிவுரைகள்:
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟
(குறைஷிகளாகிய) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் (தூதர்களை) பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினார்கள். இன்னும், அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்.
அரபு விரிவுரைகள்:
فَدَعَا رَبَّهٗۤ اَنِّیْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ۟
ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் (பலவீனமாக இருக்கிறேன்,) தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ (எனக்காக) பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.
அரபு விரிவுரைகள்:
فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۟ؗۖ
ஆகவே, நாம் அடை மழையைக் கொண்டு மேகத்தின் வாசல்களை திறந்து விட்டோம்.
அரபு விரிவுரைகள்:
وَّفَجَّرْنَا الْاَرْضَ عُیُوْنًا فَالْتَقَی الْمَآءُ عَلٰۤی اَمْرٍ قَدْ قُدِرَ ۟ۚ
இன்னும், பூமியின் ஊற்றுக் கண்களை பீறிட்டு ஓடச்செய்தோம். ஆக, (வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும்) தண்ணீர் நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக திட்டமாக சந்தித்தன.
அரபு விரிவுரைகள்:
وَحَمَلْنٰهُ عَلٰی ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍ ۟ۙ
இன்னும், அவரை பலகைகளும் ஆணிகளுமுடைய கப்பலில் பயணிக்க வைத்தோம்.
அரபு விரிவுரைகள்:
تَجْرِیْ بِاَعْیُنِنَا جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ ۟
அது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப்படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்குக் கூலி கொடுப்பதற்காக.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰیَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
அதை ஓர் அத்தாட்சியாக திட்டவட்டமாக நாம் விட்டுவைத்தோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
அரபு விரிவுரைகள்:
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
அரபு விரிவுரைகள்:
كَذَّبَتْ عَادٌ فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
ஆது சமுதாயம் பொய்ப்பித்தது. ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
அரபு விரிவுரைகள்:
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْ یَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ ۟ۙ
நிச்சயமாக நாம் அவர்கள் மீது குளிர்ந்த சூறாவளிக் காற்றை (நரகம் வரை) நீடித்து நிலையாக இருக்கும் (தண்டனை உடைய) ஒரு தீய நாளில் அனுப்பினோம்.
அரபு விரிவுரைகள்:
تَنْزِعُ النَّاسَ ۙ— كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ۟
அது மக்களை கழட்டி எறிந்தது. அவர்கள் வேரோடு சாய்ந்த பேரீட்ச மரத்தின் பின் பகுதிகளைப் போல் ஆகிவிட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
அரபு விரிவுரைகள்:
كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ ۟
ஸமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
அரபு விரிவுரைகள்:
فَقَالُوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ— اِنَّاۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟
ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்களில் இருந்து ஒருவராக இருக்கின்ற ஒரு மனிதரையா நாங்கள் பின்பற்றுவோம்! அப்படி என்றால், நிச்சயமாக நாங்கள் வழிகேட்டிலும் சிரமத்திலும் ஆகிவிடுவோம்.”
அரபு விரிவுரைகள்:
ءَاُلْقِیَ الذِّكْرُ عَلَیْهِ مِنْ بَیْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ ۟
“எங்களுக்கு மத்தியில் அவருக்கு மட்டும் இறைவேதம் இறக்கப்பட்டதா? இல்லை, அவர் பெரும் பொய்யர், திமிறு பிடித்து பெருமை பேசுகிறவர் ஆவார்.”
அரபு விரிவுரைகள்:
سَیَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ ۟
“பெரும் பொய்யர், திமிறு பிடித்து பெருமை பேசுகிறவர் யார்” என்பதை நாளை அவர்கள் அறிவார்கள்,
அரபு விரிவுரைகள்:
اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ ۟ؗ
நிச்சயமாக நாம் பெண் ஒட்டகத்தை அவர்களுக்கு சோதனையாக அனுப்புவோம். ஆக, அவர்களிடம் (அவர்களுக்கு வர இருக்கின்ற தண்டனையை) நீர் எதிர்பார்த்திருப்பீராக! இன்னும், (சகிப்புடன்) பொறுமையாக இருப்பீராக!
அரபு விரிவுரைகள்:
وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ بَیْنَهُمْ ۚ— كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ ۟
“(ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) நிச்சயமாக தண்ணீர் அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும்” என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிப்பதற்குறிய எல்லா நேரங்களிலும் அந்த நேரத்திற்குரியவர்கள் மட்டுமே வர வேண்டும்.
அரபு விரிவுரைகள்:
فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰی فَعَقَرَ ۟
ஆக, (அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் நண்பனை அழைத்தனர். ஆக, அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்தான், ஆக, அவன் (அதை) அறுத்து விட்டான்.
அரபு விரிவுரைகள்:
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?
அரபு விரிவுரைகள்:
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ صَیْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِیْمِ الْمُحْتَظِرِ ۟
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு சத்தத்தை அனுப்பினோம். ஆக, அவர்கள் (கால்நடை) தொழுவத்தின் தீணிகளைப் போல் ஆகிவிட்டனர்.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
அரபு விரிவுரைகள்:
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍۭ بِالنُّذُرِ ۟
லூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்.
அரபு விரிவுரைகள்:
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ— نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
நிச்சயமாக நாம் அவர்கள் மீது கல் மழையை அனுப்பினோம், லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர. அவர்களை நாம் அதிகாலையில் பாதுகாத்தோம்.
அரபு விரிவுரைகள்:
نِّعْمَةً مِّنْ عِنْدِنَا ؕ— كَذٰلِكَ نَجْزِیْ مَنْ شَكَرَ ۟
நம்மிடமிருந்து (அவர்கள் மீது) அருட்கொடையாக (நாம் அவர்களை பாதுகாத்தோம்). இவ்வாறுதான் நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ ۟
திட்டவட்டமாக நமது தண்டனையை அவர் அவர்களுக்கு எச்சரித்தார். ஆக, அவர்கள் அந்த எச்சரிக்கையை சந்தேகித்தனர்.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَیْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْیُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
திட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள அடம்பிடித்தனர். ஆக, நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆக, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ ۟ۚ
(நரகம் வரை) தொடர்ந்து நிலைத்திருக்கக்கூடிய தண்டனையானது காலையில் (-அதிகாலை சூரியன் விடிவதற்கு முன்) அவர்களை திட்டவட்டமாக வந்தடைந்தது.
அரபு விரிவுரைகள்:
فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
ஆக, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ ۟ۚ
இன்னும், ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு (நமது) எச்சரிக்கை திட்டவட்டமாக வந்தன.
அரபு விரிவுரைகள்:
كَذَّبُوْا بِاٰیٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِیْزٍ مُّقْتَدِرٍ ۟
அவர்கள் நமது அத்தாட்சிகளை எல்லாம் பொய்ப்பித்தனர். ஆகவே, மிகைத்தவன், மகா ஆற்றலுள்ளவன் உடைய தண்டனையால் அவர்களை தண்டித்தோம்.
அரபு விரிவுரைகள்:
اَكُفَّارُكُمْ خَیْرٌ مِّنْ اُولٰٓىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِی الزُّبُرِ ۟ۚ
உங்கள் (இக்கால) நிராகரிப்பாளர்கள், (முந்திய நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை விட சிறந்தவர்களா? (உங்களை தண்டிக்காமல் அல்லாஹ் விட்டுவிடுவானா? நீங்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்.) அல்லது, (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய) விடுதலை பத்திரம் உங்களுக்கு (முந்திய) வேதங்களில் (கூறப்பட்டு) இருக்கிறதா?
அரபு விரிவுரைகள்:
اَمْ یَقُوْلُوْنَ نَحْنُ جَمِیْعٌ مُّنْتَصِرٌ ۟
அல்லது, “நாங்கள் (எங்களை பிரிக்க நினைப்பவர்களிடம்) பழிதீர்த்துக் கொள்கிற ஒருங்கிணைந்த கூட்டம் ஆவோம்” என்று அவர்கள் கூறுகிறார்களா?
அரபு விரிவுரைகள்:
سَیُهْزَمُ الْجَمْعُ وَیُوَلُّوْنَ الدُّبُرَ ۟
(அல்லாஹ்வின் தூதரை எதிர்க்கும்) இந்த கூட்டங்கள் எல்லாம் விரைவில் தோற்கடிக்கப்படுவார்கள். இன்னும், புறமுதுகு காட்டுவார்கள்.
அரபு விரிவுரைகள்:
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰی وَاَمَرُّ ۟
மாறாக, மறுமைதான் இவர்களின் (முழுமையான தண்டனைக்கு) வாக்களிக்கப்பட்ட நேரமாகும். மறுமையோ மிக பயங்கரமானதும் மிக கசப்பானதுமாகும்.
அரபு விரிவுரைகள்:
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟ۘ
நிச்சயமாக குற்றவாளிகள் வழிகேட்டிலும் (இணைவைத்தல், சிலைவணக்கம் என்ற) மிகப் பெரிய சிரமத்திலும் இருக்கிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
یَوْمَ یُسْحَبُوْنَ فِی النَّارِ عَلٰی وُجُوْهِهِمْ ؕ— ذُوْقُوْا مَسَّ سَقَرَ ۟
நரகத்தில் அவர்களுடைய முகங்கள் மீது அவர்கள் இழுக்கப்படுகின்ற நாளில், “சகர் நரகத்தின் கடுமை(யான வலிகளை உடைய தண்டனை)யை சுவையுங்கள்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
அரபு விரிவுரைகள்:
اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ ۟
நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்.
அரபு விரிவுரைகள்:
وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ۟
(“ஆகு” என்று நாம் கூறுகின்ற) ஒற்றை வார்த்தையைத் தவிர நமது கட்டளை இல்லை, (நாம் எதை கட்டளையிட்டோமோ அது உடனே ஆகிவிடும்) கண் சிமிட்டுவதைப் போல்.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ اَهْلَكْنَاۤ اَشْیَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
(உங்களைப் போன்ற) உங்கள் சக கொள்கையுடையவர்களை (இதற்கு முன்னர்) நாம் திட்டவட்டமாக அழித்தோம். ஆக, நல்லுபதேசம் பெறுபவர் யாரும் இருக்கிறாரா?
அரபு விரிவுரைகள்:
وَكُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ ۟
அவர்கள் செய்த எல்லா விஷயங்களும் (வானவர்கள் எழுதிய செயல்) ஏடுகளில் (பதியப்பட்டு) உள்ளன.
அரபு விரிவுரைகள்:
وَكُلُّ صَغِیْرٍ وَّكَبِیْرٍ مُّسْتَطَرٌ ۟
இன்னும், (அவர்கள் செய்த) சிறியவை, பெரியவை (என) எல்லா (செயல்களு)ம் (அதில்) எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.)
அரபு விரிவுரைகள்:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَهَرٍ ۟ۙ
நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கத்து தோட்டங்களிலும் நதிகளிலும் இருப்பார்கள்.
அரபு விரிவுரைகள்:
فِیْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِیْكٍ مُّقْتَدِرٍ ۟۠
(வீண் பேச்சுகள் அற்ற) உண்மையான பேச்சுகளுடைய (பொய்யும் பாவமுமற்ற) சபையில், பேராற்றலுடையவனான (மகா வல்லமைமிக்கவனான) பேரரசனுக்கு அருகில் இருப்பார்கள்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்கமர்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக