Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ന്നഹ്ൽ   ആയത്ത്:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِیْۤ اِلَیْهِمْ فَسْـَٔلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟ۙ
16.43. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக்கி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். வானவர்களை நாம் தூதர்களாக அனுப்பவில்லை. இதுதான் நம்முடைய வழமையான வழிமுறை. நீங்கள் இதனை மறுப்பவர்களாக இருந்தால், அவர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை அறியாதவர்களாக இருந்தால் முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடம் கேட்டுப் பாருங்கள். தூதர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள், வானவர்களாக இருக்கவில்லை என்பதை அவர்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ ؕ— وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الذِّكْرَ لِتُبَیِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَیْهِمْ وَلَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
16.44. மனிதர்களிலுள்ள இந்த தூதர்களை நாம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் இறக்கப்பட்ட வேதங்களைக் கொண்டும் அனுப்பினோம். -தூதரே!- குர்ஆனில் விளக்கம் தேவையானவற்றை நீங்கள் விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தமது சிந்தனையைச் செயற்படுத்தி, அதிலுள்ளவற்றின் மூலம் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காகவும் நாம் உம் மீது அதனை இறக்கியுள்ளோம்.
അറബി തഫ്സീറുകൾ:
اَفَاَمِنَ الَّذِیْنَ مَكَرُوا السَّیِّاٰتِ اَنْ یَّخْسِفَ اللّٰهُ بِهِمُ الْاَرْضَ اَوْ یَاْتِیَهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
16.45. அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக பல் வேறு சூழ்ச்சிகள் செய்தவர்கள், காரூனைப் பூமியில் புதையச் செய்தததைப் போல அவர்களையும் பூமியில் அல்லாஹ் புதையச் செய்திடுவான் அல்லது அவர்கள் அறியாத புறத்திலிருந்து வேதனை அவர்களை வந்தடையும் என்பதில் அச்சமற்று உள்ளனரா?
അറബി തഫ്സീറുകൾ:
اَوْ یَاْخُذَهُمْ فِیْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِیْنَ ۟ۙ
16.46. அல்லது வாழ்வாதாரம் தேடி அவர்கள் பயணத்தில் இருக்கும் சமயத்தில் அவர்களை வேதனை வந்தடையலாம். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தப்பவோ தவிர்ந்து கொள்ளவோ முடியாது.
അറബി തഫ്സീറുകൾ:
اَوْ یَاْخُذَهُمْ عَلٰی تَخَوُّفٍ ؕ— فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
16.47. அல்லது அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தடையக் கூடும் என்பதைக் குறித்து அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா? எல்லா நிலைகளிலும் அவர்களைத் தண்டிப்பதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன். உங்களின் இறைவன் பரிவுமிக்கவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். தனது அடியார்கள் தன்னிடம் தவ்பா செய்யலாம் என்பதனால் அவன் விரைவாக தண்டிப்பதில்லை.
അറബി തഫ്സീറുകൾ:
اَوَلَمْ یَرَوْا اِلٰی مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَیْءٍ یَّتَفَیَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْیَمِیْنِ وَالشَّمَآىِٕلِ سُجَّدًا لِّلّٰهِ وَهُمْ دٰخِرُوْنَ ۟
16.48. இந்த பொய்பிப்பவர்கள் அவனுடைய படைப்புகளை ஆய்வுக்கண் கொண்டு பார்க்கவில்லையா? பகலில் சூரியனின் இயக்கத்திற்கேற்பவும் இரவில் சந்திரனின் இயக்கத்திற்கேற்பவும் அவற்றின் நிழல்கள் வலது புறமும் இடது புறமும் சாய்கின்றன; தம் இறைவனுக்கு அடிபணிந்து உண்மையாக சிரம்பணிகின்றன.
അറബി തഫ്സീറുകൾ:
وَلِلّٰهِ یَسْجُدُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰٓىِٕكَةُ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
16.49. வானங்களிலும் பூமியிலும் உள்ள உயிரினங்கள் யாவும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிகின்றன. வானவர்கள் அவனுக்கே சிரம்பணிகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை வணங்கி அவனை வழிப்படுவதை விட்டும் கர்வம் கொள்வதில்லை.
അറബി തഫ്സീറുകൾ:
یَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَیَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ ۟
16.50. அவர்கள் - அவனை இடைவிடாமல் வணங்கி வழிப்பட்ட போதும் - உள்ளமையால் தமக்கு மேலிருந்து ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தும் தம் இறைவனை அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அவன் அவர்களுக்கு வழிப்படுமாறு இடும் கட்டளைகளைச் செயல்படுத்துகிறார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَقَالَ اللّٰهُ لَا تَتَّخِذُوْۤا اِلٰهَیْنِ اثْنَیْنِ ۚ— اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— فَاِیَّایَ فَارْهَبُوْنِ ۟
16.51. அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் கூறுகிறான்: “இரு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே, இருவர் அல்ல. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. எனவே என்னையே அஞ்சுங்கள். என்னைத் தவிர மற்றவர்களை அஞ்சாதீர்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَلَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَهُ الدِّیْنُ وَاصِبًا ؕ— اَفَغَیْرَ اللّٰهِ تَتَّقُوْنَ ۟
16.52. வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்பு, அதிகாரம், நிர்வாகம் அனைத்தும் அவனுக்கே உரியன. கட்டுப்படுவதும், அடிபணிவதும், உளத்தூய்மையும் அவனுக்கே உரியன. நீங்கள் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கா அஞ்சுகிறீர்கள்? இல்லை, என்றாலும் அவனையே அஞ்சுங்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
وَمَا بِكُمْ مِّنْ نِّعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَیْهِ تَجْـَٔرُوْنَ ۟ۚ
16.53. -மனிதர்களே!- நீங்கள் அனுபவிக்கும் மார்க்க, உலக, அருட்கொடைகள் யாவும் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். வேறு யாரிடமும் அல்ல. பின்னர் உங்களை வறுமையோ, நோயோ, துன்பமோ தாக்கிவிட்டால் அதனை நீக்குவதற்காக அவனிடமே நீங்கள் பிராா்த்தித்து மன்றாடுகிறீர்கள். உங்களுக்கு அருட்கொடைகள் அளிக்கும், துன்பத்தைப் போக்கும் இறைவன் மாத்திரமே வணங்கப்படுவது கட்டாயமாகும்.
അറബി തഫ്സീറുകൾ:
ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِیْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَ ۟ۙ
16.54. பின்னர் அவன் உங்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்து உங்களின் துன்பத்தைப் போக்கி விட்டால் உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்துகிறார்கள். அவனுடன் மற்றவர்களையும் வணங்குகிறார்கள். எவ்வளவு மோசமான விஷயம் இது?
അറബി തഫ്സീറുകൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• على المجرم أن يستحي من ربه أن تكون نعم الله عليه نازلة في جميع اللحظات ومعاصيه صاعدة إلى ربه في كل الأوقات.
1. அல்லாஹ் அருட்கொடைகளை மனிதனின் மீது சதாவும் இறங்கிக்கொண்டிருக்கும் அதே வேளை எப்பொழுதும் அவனது பாவங்களே இறைவனைச் சென்றடைகிறது என்பதை நினைத்து பாவி வெட்கப்பட வேண்டும்.

• ينبغي لأهل الكفر والتكذيب وأنواع المعاصي الخوف من الله تعالى أن يأخذهم بالعذاب على غِرَّة وهم لا يشعرون.
2.நிராகரிப்பாளர்கள், பொய்பிப்பவர்கள், பாவிகள் ஆகியோர் (எதையும்) உணராமல் அலட்சியமாக இருக்கும் சமயத்தில் அவர்களை அல்லாஹ் வேதனையால் தண்டித்துவிடலாம் என்பதால் அவர்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும்.

• جميع النعم من الله تعالى، سواء المادية كالرّزق والسّلامة والصّحة، أو المعنوية كالأمان والجاه والمنصب ونحوها.
3. அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவையே. அவை வாழ்வாதாரம், பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்ற பௌதீக அருட்கொடைகளாக இருந்தாலும் சரி; அந்தஸ்து, பதவி, நிம்மதி போன்ற மானசீக அருட்கொடைகளாக இருந்தாலும் சரி!

• لا يجد الإنسان ملجأً لكشف الضُّرِّ عنه في وقت الشدائد إلا الله تعالى فيضجّ بالدّعاء إليه؛ لعلمه أنه لا يقدر أحد على إزالة الكرب سواه.
4. துன்ப துயரங்களின் போது தன்னை விட்டும் அதனை நீக்குவதற்கு மனிதனுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு புகலிடம் கிடையாது. துன்பத்தை அவனைத் தவிர வேறு யாரும் அகற்ற முடியாது என்று அவன் அறிந்துள்ளதனால் அவனிடம் பிரார்த்தித்து மன்றாடுகின்றான்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ന്നഹ്ൽ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അവസാനിപ്പിക്കുക