Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: യൂസുഫ്   ആയത്ത്:
قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍ ۚ— وَمَا نَحْنُ بِتَاْوِیْلِ الْاَحْلَامِ بِعٰلِمِیْنَ ۟
12.44. அவர்கள் கூறினார்கள்: “நீர் கண்ட கனவு குழப்பமான கனவாகும். இவ்வகையான கனவுகளுக்கு எந்த விளக்கமும் இல்லை. நாங்கள் குழப்பமான கனவுகளுக்கு விளக்கம் அறிந்தவர்கள் அல்ல.”
അറബി തഫ്സീറുകൾ:
وَقَالَ الَّذِیْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَبِّئُكُمْ بِتَاْوِیْلِهٖ فَاَرْسِلُوْنِ ۟
12.45. சிறையில் இருந்த இருவரில் விடுதலையடைந்த மது ஊற்றிக் கொடுப்பவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு யூஸுஃபை, கனவுக்கு விளக்கம் கூறும் அவரது அறிவையும் நினைவு கூர்ந்தவராக கூறினார்: “அரசர் கண்ட கனவின் விளக்கத்தை அதனை அறிந்தவரிடம் கேட்டு நான் உங்களுக்கு அறிவிப்பேன். -அரசரே!- நீங்கள் கண்ட கனவின் விளக்கத்தைக் கூற என்னை யூஸுஃபிடம் அனுப்புங்கள்.”
അറബി തഫ്സീറുകൾ:
یُوْسُفُ اَیُّهَا الصِّدِّیْقُ اَفْتِنَا فِیْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ— لَّعَلِّیْۤ اَرْجِعُ اِلَی النَّاسِ لَعَلَّهُمْ یَعْلَمُوْنَ ۟
12.46. சிறையிலிருந்து வெளியேறிய அவர் யூஸுஃபிடம் வந்த பிறகு அவரிடம் கேட்டார்: “யூசுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுமாடுகளை ஏழு மெலிந்த பசுமாடுகள் தின்று கொண்டிருப்பதையும் ஏழு பசுமையான கதிர்களையும் ஏழு காய்ந்த கதிர்களையும் கனவில் கண்டவருக்கான விளக்கத்தை எமக்குக் கூறுங்கள். நான் அரசரிடமும் அவரோடு இருப்போரிடமும் திரும்பிச் செல்வேன். அரசனின் கனவின் விளக்கத்தை அவர்கள் புரிந்து உமது சிறப்பையும் மகிமையையும் அறிந்துகொள்வார்கள்.”
അറബി തഫ്സീറുകൾ:
قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِیْنَ دَاَبًا ۚ— فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِیْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِیْلًا مِّمَّا تَاْكُلُوْنَ ۟
12.47. யூஸுஃப் அந்த கனவிற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார்: “நீங்கள் தொடர்ந்து ஏழு வருடங்கள் நன்கு பயிரிடுவீர்கள். இந்த ஏழு வருடங்களில் நீங்கள் அறுவடை செய்யும் போது நீங்கள் உண்பதற்குத் தேவையான தானியங்களைத் தவிர மீதமுள்ள தானியங்களை கெட்டுப் போவதைத் தடுக்குமுகமாக அதன் கதிர்களிலேயே விட்டு விடுங்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ یَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِیْلًا مِّمَّا تُحْصِنُوْنَ ۟
12.48. செழிப்பான இந்த ஏழு வருடங்களுக்குப் பிறகு பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் வரும். விதைக்காக வேண்டி அவர்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ள குறைவானவற்றைத் தவிர செழிப்பான வருடங்களில் அறுவடை செய்தவற்றை மக்கள் இந்த வருடங்களில் உண்பார்கள்.
അറബി തഫ്സീറുകൾ:
ثُمَّ یَاْتِیْ مِنْ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِیْهِ یُغَاثُ النَّاسُ وَفِیْهِ یَعْصِرُوْنَ ۟۠
12.49. பின்னர் இந்த பஞ்ச காலத்திற்குப் பிறகு வரக்கூடிய ஆண்டில் நல்ல மழை பொழியும். அப்போது விளைச்சல்கள் அதிகரிக்கும். மக்கள் திராட்சை, ஸைதூன், கரும்பு போன்ற பழரசம் பிழிவதற்கு தேவையானவற்றை கொண்டு பழரசம் பிழிவார்கள்.”
അറബി തഫ്സീറുകൾ:
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖ ۚ— فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰی رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِیْ قَطَّعْنَ اَیْدِیَهُنَّ ؕ— اِنَّ رَبِّیْ بِكَیْدِهِنَّ عَلِیْمٌ ۟
12.50. தனது கனவுக்கான யூஸுஃபின் விளக்கம் அரசரை அடைந்த போது அவர் தம் உதவியாளர்களிடம் கூறினார்: “அவரை சிறையிலிருந்து விடுதலை செய்து என்னிடம் அழைத்து வாருங்கள். அரசரின் தூதர் யூஸுஃபிடம் வந்தபோது யூஸுஃப் அவரிடம் கூறினார்: “உம் எஜமானிடம் திரும்பிச் சென்று தங்களின் கைகளை அறுத்துக் கொண்ட அந்தப் பெண்களைக் குறித்துக் கேட்பீராக. விடுதலையடைவதற்கு முன்னர் அவர் குற்றமற்றவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறினார். நிச்சயமாக என் இறைவன் அவர்கள் எனக்குச் செய்த ஏமாற்று வேலையை நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.”
അറബി തഫ്സീറുകൾ:
قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ یُوْسُفَ عَنْ نَّفْسِهٖ ؕ— قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَیْهِ مِنْ سُوْٓءٍ ؕ— قَالَتِ امْرَاَتُ الْعَزِیْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّ ؗ— اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
அரசன் அந்தப் பெண்களைப் பார்த்துக் கூறினார் "தந்திரமாக உங்களுடன் தவறான முறையில் நடப்பதற்குத் தந்திரமாக நீங்கள் யூஸுபை அழைத்த விவகாரம் என்ன?' அதற்கு அப்பெண்கள் பதிலளித்தனர்; யூஸுப் சந்தேகத்திற்குள்ளாவதை விட்டும் தூய்மையானவர். அவர்மீது எக்குற்றமும் இல்லை''. அப்போது உடனே தான் செய்ததை ஏற்றுக்கொண்டு அஸீஸின் மனைவி கூறினாள்: இப்போது உண்மை வெளிவந்துவிட்டது நான்தான் அவரை தவறுசெய்யத் தூண்டினேன் அவரல்ல. அவரின் மீது நான் சுமத்திய அவதூறை விட்டும் தான் தூய்மையானவர் என்ற தனது வாதத்தில் அவர் உண்மையானவர்தான்.
അറബി തഫ്സീറുകൾ:
ذٰلِكَ لِیَعْلَمَ اَنِّیْ لَمْ اَخُنْهُ بِالْغَیْبِ وَاَنَّ اللّٰهَ لَا یَهْدِیْ كَیْدَ الْخَآىِٕنِیْنَ ۟
12.52. மன்னனின் மனைவி கூறினாள்: “நான்தான் யூஸுஃபை வழிகெடுக்க முயன்றேன் அவர் உண்மையாளரே என்பதை நான் ஒத்துக்கொண்டது, அவர் இல்லாத போது எதையும் நான் அவர் மீது இட்டுக்கட்டிக் கூறவில்லையென அவர் அறிந்துகொள்வதற்கேயாகும். அல்லாஹ் பொய் கூறுபவர்களுக்கு, சூழ்ச்சி செய்பவர்களுக்கு நேர்வழிகாட்ட மாட்டான் என்பது நடந்தவற்றிலிருந்து எனக்குப் புரிந்துவிட்டது.”
അറബി തഫ്സീറുകൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• من كمال أدب يوسف أنه أشار لحَدَث النسوة ولم يشر إلى حَدَث امرأة العزيز.
1.அஸீஸின் மனைவியின் நிகழ்வைச் சுட்டிக்காட்டாது பெண்களின் நிகழ்வைச் சுட்டிக்காட்டியது யூஸுஃப் அலை அவர்களது ஒழுக்கத்தின் பரிபூரணத் தன்மையில் உள்ளதாகும்.

• كمال علم يوسف عليه السلام في حسن تعبير الرؤى.
2. கனவுகளுக்கு விளக்கம் அளிப்பதில் யூஸுஃப் (அலை) அவர்கள் முழுமையான ஞானத்தைப் பெற்றிருந்தார்கள்.

• مشروعية تبرئة النفس مما نُسب إليها ظلمًا، وطلب تقصّي الحقائق لإثبات الحق.
3. அநியாயமாக பழிசுமத்தப்பட்டவர் தம்மைக் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். உண்மையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை அவர் தேட வேண்டும்.

• فضيلة الصدق وقول الحق ولو كان على النفس.
4.தனக்கு எதிராக இருந்தாலும் சத்தியத்தைக் கூறுவதன் சிறப்பு தெளிவாகிறது.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: യൂസുഫ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അവസാനിപ്പിക്കുക