Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಉಮರ್ ಶರೀಫ್ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ತ್ವಾಹಾ   ಶ್ಲೋಕ:
فَتَعٰلَی اللّٰهُ الْمَلِكُ الْحَقُّ ۚ— وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ یُّقْضٰۤی اِلَیْكَ وَحْیُهٗ ؗ— وَقُلْ رَّبِّ زِدْنِیْ عِلْمًا ۟
ஆக, உண்மையாளனும் அரசனுமாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனில் (ஒரு வசனம் இறக்கப்பட்ட பின்னர்) அதனுடைய (முழு விளக்கம் தொடர்பான) வஹ்யி உமக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவசரப்ப(ட்டு பிறருக்கு ஓதி காண்பித்து வி)டாதீர்! இன்னும், கூறுவீராக: “என் இறைவா எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து!”
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلَقَدْ عَهِدْنَاۤ اِلٰۤی اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِیَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا ۟۠
திட்டவட்டமாக இதற்கு முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். ஆனால், அவர் (அதை) மறந்து விட்டார். அவரிடம் நாம் (நமது கட்டளையை நிறைவேற்றுவதில்) உறுதியைக் காணவில்லை.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اَبٰی ۟
இன்னும், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்” என்று வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, இப்லீஸைத் தவிர அவர்கள் சிரம் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
فَقُلْنَا یٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا یُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقٰی ۟
ஆக, நாம் கூறினோம்: “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரி ஆவான். ஆகவே, அவன் உங்கள் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிடாமல் இருக்கட்டும். (அப்படி நீர் வெளியேறிவிட்டால்) மிகுந்த சிரமப்படுவீர்.”
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اِنَّ لَكَ اَلَّا تَجُوْعَ فِیْهَا وَلَا تَعْرٰی ۟ۙ
இ(ந்த சொர்க்கத்)தில் நீர் பசித்திருக்காத, நீர் ஆடையற்றிருக்காத பாக்கியம் நிச்சயமாக உமக்கு உண்டு.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِیْهَا وَلَا تَضْحٰی ۟
இன்னும், நிச்சயமாக நீர் அதில் தாகிக்க மாட்டீர். இன்னும், வெப்பத்தை உணரமாட்டீர்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
فَوَسْوَسَ اِلَیْهِ الشَّیْطٰنُ قَالَ یٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰی شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا یَبْلٰی ۟
ஆக, ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆதமே! (சொர்க்கத்தில்) நிரந்தரத்தை தரும் மரத்தையும் (உமக்கு) அழியாத ஆட்சி கிடைப்பதையும் நான் உமக்கு அறிவிக்கவா? என்று கூறினான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؗ— وَعَصٰۤی اٰدَمُ رَبَّهٗ فَغَوٰی ۪۟ۖ
ஆக, அவ்விருவரும் அ(ந்த மரத்)திலிருந்து சாப்பிட்டனர். ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் மறைவிடங்கள் தெரிய வந்தன. இன்னும், சொர்க்கத்தின் இலைகளை அவ்விருவரும் தங்கள் மீது கட்டி (தங்கள் மறைவிடத்தை மறைத்து)க் கொள்வதற்கு முற்பட்டனர். ஆதம், தன் இறைவனுக்கு மாறுசெய்தார். ஆகவே, அவர் வழி தவறிவிட்டார்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ثُمَّ اجْتَبٰهُ رَبُّهٗ فَتَابَ عَلَیْهِ وَهَدٰی ۟
(அவர் தன் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்பு கோரிய) பிறகு அவருடைய இறைவன் அவரை தேர்ந்தெடுத்தான். ஆக, அவன் அவரை மன்னித்தான். இன்னும், (அவருக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கும் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கும்) நேர்வழி காட்டினான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
قَالَ اهْبِطَا مِنْهَا جَمِیْعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ— فَاِمَّا یَاْتِیَنَّكُمْ مِّنِّیْ هُدًی ۙ۬— فَمَنِ اتَّبَعَ هُدَایَ فَلَا یَضِلُّ وَلَا یَشْقٰی ۟
(அல்லாஹ்) கூறினான்: “நீங்கள் இருவரும் (இப்லீஸ் உட்பட) அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர், சிலருக்கு எதிரி ஆவர். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால் எவர் எனது நேர்வழியை பின்பற்றுவாரோ அவர் வழிதவற மாட்டார். இன்னும், அவர் (மறுமையில்) சிரமப்பட மாட்டார்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِیْ فَاِنَّ لَهٗ مَعِیْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ یَوْمَ الْقِیٰمَةِ اَعْمٰی ۟
இன்னும், எவன் என் அறிவுரையை புறக்கணிப்பானோ நிச்சயமாக அவனுக்கு (மண்ணறையில்) மிக நெருக்கடியான வாழ்க்கைதான் உண்டு. இன்னும், மறுமையில் அவனை குருடனாக நாம் எழுப்புவோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِیْۤ اَعْمٰی وَقَدْ كُنْتُ بَصِیْرًا ۟
அவன் கூறுவான்: “என் இறைவா! என்னை குருடனாக ஏன் எழுப்பினாய், நான் பார்வை உள்ளவனாக இருந்தேனே?”
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ತ್ವಾಹಾ
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಉಮರ್ ಶರೀಫ್ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಅನುವಾದ - ಶೈಖ್ ಉಮರ್ ಶರೀಫ್ ಬಿನ್ ಅಬ್ದುಸ್ಸಲಾಂ

ಮುಚ್ಚಿ