Check out the new design

ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - មាតិកានៃការបកប្រែ

XML CSV Excel API
Please review the Terms and Policies

ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អើររ៉ក់ទ៍   វាក្យខណ្ឌ:
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰی لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ۟
நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், அவர்களுக்கு நற்பாக்கியமும் அழகிய மீளுமிடமும் உண்டு.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِیْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّتَتْلُوَاۡ عَلَیْهِمُ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَهُمْ یَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ ؕ— قُلْ هُوَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ مَتَابِ ۟
(நபியே! முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதுவதற்காக (அவர்களிடம் உம்மை அனுப்பினோம்). இவர்களோ ரஹ்மானை (பேரருளாளன் அல்லாஹ்வை) நிராகரிக்கின்றனர். கூறுவீராக! “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்தேன். இன்னும் அவனிடமே என் பாவ மீட்சி இருக்கிறது.”
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُیِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰی ؕ— بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِیْعًا ؕ— اَفَلَمْ یَایْـَٔسِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ لَهَدَی النَّاسَ جَمِیْعًا ؕ— وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا تُصِیْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِیْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰی یَاْتِیَ وَعْدُ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
(நபியே! முன்னர் இறக்கப்பட்ட) ஒரு வேதம், அதைக் கொண்டு மலைகள் நகர்த்தப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு பூமி துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு மரணித்தவர்கள் பேசவைக்கப்பட்டிருந்தால்... (உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தைக் கொண்டும் அப்படி செய்யப்பட்டிருக்கும்.) மாறாக, அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? (மக்காவைச் சேர்ந்த இந்)நிராகரித்தவர்கள் செய்ததின் காரணமாக அவர்களை ஒரு திடுக்கம் அடைந்து கொண்டே இருக்கும். அல்லது அவர்களின் ஊருக்கு அருகாமையில் நீர் (உம் படையுடன்) இறங்குவீர். இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி வரும். (விரைவில் அவர்களை நீர் வெற்றி கொள்வீர்.) நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மாற்றமாட்டான்.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَیْتُ لِلَّذِیْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ ۫— فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
(நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டமாக பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு (தவணையை) நீட்டினேன். பிறகு, அவர்களைப் பிடித்தேன். என் தண்டனை எப்படி இருந்தது?
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
اَفَمَنْ هُوَ قَآىِٕمٌ عَلٰی كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ— وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ ؕ— قُلْ سَمُّوْهُمْ ؕ— اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا یَعْلَمُ فِی الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ؕ— بَلْ زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِیْلِ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
ஒவ்வொரு ஆன்மாவும் அவை செய்தவற்றுக்கு ஏற்ப அவற்றை நிர்வகிப்பவனா (எதையும் செய்ய சக்தியற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவான்)? அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று பெயரிடமுடியுமா?) அல்லது பூமியில் அவன் அறியாததை அல்லது பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.) மாறாக! நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சி அலங்கரிக்கப்பட்டது. (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
لَهُمْ عَذَابٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ ۚ— وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
அவர்களுக்கு உலக வாழ்வில் வேதனையுண்டு. மறுமையின் வேதனைதான் மிகச் சிரமமானது. அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இல்லை.
ការបកស្រាយជាភាសា​អារ៉ាប់:
 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អើររ៉ក់ទ៍
មាតិកានៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - មាតិកានៃការបកប្រែ

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

បិទ