Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة * - Loowdi firooji ɗi

XML CSV Excel API
Please review the Terms and Policies

Firo maanaaji Simoore.: Simoore yuunus   Aaya.:
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ— اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟
நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதுவீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்குவதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். ஆகவே, உங்கள் காரியத்தை முடிவுசெய்யுங்கள்; உங்கள் இணைதெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்); பிறகு, உங்கள் காரியம் உங்கள் மீது குழப்பமானதாக ஆகிவிடவேண்டாம். பிறகு, என் பக்கம் (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். (இதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
فَاِنْ تَوَلَّیْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ ؕ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۙ— وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
நீங்கள் (புறக்கணித்து) திரும்பினால், (எனக்கு கவலையில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (மற்றவர் மீது) இல்லை. முஸ்லிம்களில் நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன் (என்று கூறினார்).
Tafsiraaɗe Aarabu ɗen:
فَكَذَّبُوْهُ فَنَجَّیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟
(அம்மக்கள்) அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் பாதுகாத்தோம். அவர்களை பிரதிநிதிகளாக ஆக்கினோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்று கவனிப்பீராக!
Tafsiraaɗe Aarabu ɗen:
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهٖ رُسُلًا اِلٰی قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ— كَذٰلِكَ نَطْبَعُ عَلٰی قُلُوْبِ الْمُعْتَدِیْنَ ۟
அவருக்குப் பின்னர் (பல) தூதர்களை அவர்களுடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்கள் அவர்களிடம் (பல) அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். முன்னர் அவர்கள் பொய்ப்பித்தவற்றை நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருக்கவில்லை. வரம்பு மீறிகளின் உள்ளங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
பிறகு, இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். (எனினும்,) அவர்கள் கர்வம் கொண்டனர்; குற்றம் புரிகின்ற சமுதாயமாக இருந்தனர்.
Tafsiraaɗe Aarabu ɗen:
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِیْنٌ ۟
அவர்களுக்கு நம்மிடமிருந்து உண்மை வந்தபோது “நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்” என்று கூறினார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ— اَسِحْرٌ هٰذَا ؕ— وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟
“உண்மையை -அது உங்களிடம் வந்த போது. (-சூனியம் என்று அதை) கூறுகிறீர்களா? சூனியமா இது? சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِیَآءُ فِی الْاَرْضِ ؕ— وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِیْنَ ۟
அதற்கவர்கள் “எங்கள் மூதாதையர்களை எதில் நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களை நீர் திருப்பி விடுவதற்கும், பூமியில் உங்கள் இருவருக்கும் மகத்துவ(மு)ம் (பெருமையும் ஆதிக்கமும்) ஆகிவிடுவதற்கு நீர் எங்களிடம் வந்தீரா? உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களாக நாங்கள் இல்லை.” என்று கூறினார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
 
Firo maanaaji Simoore.: Simoore yuunus
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة - Loowdi firooji ɗi

ترجمها الشيخ عمر شريف بن عبد السلام.

Uddu