Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore faatir   Aaya:
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۟ۙ
35.19. குருடனும் பார்வையுடையவனும் எவ்வாறு சமமாக மாட்டார்களோ அவ்வாறே நிராகரிப்பாளனும் நம்பிக்கையாளனும் பதவியில் சமமாக மாட்டார்கள்.
Faccirooji aarabeeji:
وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُ ۟ۙ
35.20. இருள்களும் ஒளியும் எவ்வாறு சமமாகாதோ அவ்வாறே நிராகரிப்பும் ஈமானும் சமமாகாது.
Faccirooji aarabeeji:
وَلَا الظِّلُّ وَلَا الْحَرُوْرُ ۟ۚ
35.21. நிழலும் சூடான காற்றும் எவ்வாறு சமமாகாதோ அவ்வாறே சுவனமும் நரகமும் பாதிப்பில் சமமாகாது.
Faccirooji aarabeeji:
وَمَا یَسْتَوِی الْاَحْیَآءُ وَلَا الْاَمْوَاتُ ؕ— اِنَّ اللّٰهَ یُسْمِعُ مَنْ یَّشَآءُ ۚ— وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِی الْقُبُوْرِ ۟
35.22. இறந்தவர்களும் உயிருள்ளவர்களும் எவ்வாறு சமமாக மாட்டார்களோ அவ்வாறே நிராகரிப்பாளர்களும் நம்பிக்கையாளர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் யாருக்கு நேர்வழியளிக்க நாடுகிறானோ அவரை செவியேற்கச் செய்கிறான். -தூதரே!-அடக்கஸ்த்தலத்தில் உள்ள மரணித்தவர்களைப் போன்று காணப்படும் நிராகரிப்பாளர்களுக்கு உம்மால் செவியேற்கச் செய்ய முடியாது.
Faccirooji aarabeeji:
اِنْ اَنْتَ اِلَّا نَذِیْرٌ ۟
35.23. நீர் அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து அவர்களை எச்சரிக்கை செய்பவர்தாம்.
Faccirooji aarabeeji:
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ؕ— وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِیْهَا نَذِیْرٌ ۟
35.24. -தூதரே!- நாம் உம்மை சந்தேகம் இல்லாத உறுதியான சத்தியத்தைக் கொண்டும், நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கண்ணியமான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுபவராகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனை மிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியுள்ளோம். அல்லாஹ்வின் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர் அனுப்பப்படாத, கடந்துபோன எந்த சமூகமும் இல்லை.
Faccirooji aarabeeji:
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۚ— جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِیْرِ ۟
35.25. தூதரே! உம் சமூகம் உம்மை பொய்ப்பித்தால் பொறுமையாக இருப்பீராக. ஏனெனில் நீர் தன் சமூகம் பொய்ப்பிக்கும் முதலாவது தூதரல்ல. இவர்களுக்கு முன்னிருந்த ஆத், ஸமூத், லூதின் சமூகம் போன்ற சமூகங்களும் தமது தூதர்களை பொய்ப்பித்தார்கள். தூதர்கள் அவர்களிடம் தங்களின் நம்பகத்தன்மையை அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்களை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தார்கள். அவர்கள் சிந்திக்கக்கூடியவர்களுக்காக ஆகமங்களையும் ஒளிவீசும் வேதங்களையும் அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தார்கள்.
Faccirooji aarabeeji:
ثُمَّ اَخَذْتُ الَّذِیْنَ كَفَرُوْا فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠
35.26. இருந்தும் அவர்கள் அல்லாஹ்வையும் அவனிடமிருந்து கொண்டுவந்ததையும் அவனுடைய தூதர்களையும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தார்கள். நிராகரித்தவர்களை நான் அழித்துவிட்டேன். -தூதரே!- அவர்களை அழித்த எனது தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக.
Faccirooji aarabeeji:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ— فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَا ؕ— وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِیْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِیْبُ سُوْدٌ ۟
35.27. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழை நீரை இறக்கி அதன் மூலம் மரங்களுக்கு நீரூட்டி அதன் மூலம் சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஏனைய நிறங்களுடைய பழங்களை வெளிப்படுத்துகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மலைகளிலும் வெண்மை, சிவப்பு மற்றும் கடும் கருப்பு நிறமுடைய பாதைகள் காணப்படுகின்றன.
Faccirooji aarabeeji:
وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَلْوَانُهٗ كَذٰلِكَ ؕ— اِنَّمَا یَخْشَی اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ غَفُوْرٌ ۟
35.28. மனிதர்கள், உயிரினங்கள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) ஆகியவற்றிலும் அவ்வாறு மேற்கூறப்பட்டது போன்று பல நிறங்கள் காணப்படுகின்றன. நிச்சயமாக அல்லாஹ்வைக் குறித்து அறிந்தவர்கள்தாம் அவனை கண்ணியப்படுத்துவார்கள், அஞ்சுவார்கள். ஏனெனில் அவர்கள்தாம் அவனுடைய பண்புகளையும் அவன் விதித்த சட்டங்களையும் அவனுடைய வல்லமையின் ஆதாரங்களையும் அறிந்தவர்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.
Faccirooji aarabeeji:
اِنَّ الَّذِیْنَ یَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً یَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَ ۟ۙ
35.29. நிச்சயமாக யாரெல்லாம் நாம் நம் தூதர் மீது இறக்கிய வேதத்தைப் படித்து அதனடிப்படையில் செயல்பட்டு, தொழுகையைப் பரிபூரணமான முறையில் நிறைவேற்றி, நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து ஸகாத்தை கொடுத்து அது அல்லாது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செலவும் செய்கிறார்களோ அவர்கள்தாம் இந்த செயல்களின் மூலம் அல்லாஹ்விடம் என்றும் நஷ்டமடையாத வியாபாரத்தை எதிர்பார்க்கிறார்கள்.
Faccirooji aarabeeji:
لِیُوَفِّیَهُمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ— اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
35.30. அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை முழுமையாக வழங்கிடுவான். அவர்களுக்கு தன் அருளிலிருந்து மேலதிகமாகவும் வழங்குவான். அவன் அதற்குத் தகுதியானவன். இந்த பண்புகளைப் பெற்றவர்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் நற்செயல்களுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• نفي التساوي بين الحق وأهله من جهة، والباطل وأهله من جهة أخرى.
1. சத்தியமும் சத்தியவாதிகளும் ஒரு திசையிலும், அசத்தியமும் அசத்தியவாதிகளும் இன்னொரு திசையி லும் இருக்கிறார்கள். ஒருபோதும் சமமாக முடியாது.

• كثرة عدد الرسل عليهم السلام قبل رسولنا صلى الله عليه وسلم دليل على رحمة الله وعناد الخلق.
2. நம்முடைய தூதர் முஹம்மது நபிக்கு முன்னால் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். இது படைப்புகளின் மீது அல்லாஹ் புரிந்த கருணையையும் மக்களின் பிடிவாதத்தையும் காட்டுகிறது.

• إهلاك المكذبين سُنَّة إلهية.
3. பொய்ப்பிப்பவர்களை அழிப்பது அல்லாஹ்வின் வழிமுறையாகும்.

• صفات الإيمان تجارة رابحة، وصفات الكفر تجارة خاسرة.
4. ஈமானின் பண்புகள் இலாபகரமான வியாபாரமாகும். நிராகரிப்பின் பண்புகள் நஷ்டத்தை ஏற்படுத்தும் வியாபாரமாகும்.

 
Firo maanaaji Simoore: Simoore faatir
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude