Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Loowdi firooji ɗi


Firo maanaaji Simoore.: Simoore yimooɓe   Aaya.:
كَذَّبَتْ قَوْمُ لُوْطِ ١لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
26.160. லூத்தின் சமூகம் அவரை பொய்ப்பித்ததன் மூலம் தூதர்களை பொய்ப்பித்தனர்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
26.161. அவர்களின் சகோதரர் லூத் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டு அவனை அஞ்ச மாட்டீர்களா?
Tafsiraaɗe Aarabu ɗen:
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
26.162. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
Tafsiraaɗe Aarabu ɗen:
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
26.163. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவியவற்றிலும் தடுத்தவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
26.164. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத எனையவர்களிடமல்ல.
Tafsiraaɗe Aarabu ɗen:
اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِیْنَ ۟ۙ
26.165. நீங்கள் ஆண்களின் பின்புறத்தில் அவர்களுடன் உறவுகொள்கிறீர்களா?
Tafsiraaɗe Aarabu ɗen:
وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ ؕ— بَلْ اَنْتُمْ قَوْمٌ عٰدُوْنَ ۟
26.166. உங்களின் இச்சையைத் தணித்துக்கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவியரை விட்டுவிடுகிறீர்களா? மாறாக யாரும் செய்யாத மோசமான இந்த செயலின் மூலம் நீங்கள் அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறிவிட்டீர்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِیْنَ ۟
26.167. அவரது சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “லூத்தே! நாங்கள் செய்யும் செயலைத் தடுப்பதிலிருந்து, மறுப்பதிலிருந்து நீர் விலகிக்கொள்ளாவிட்டால் எங்களின் ஊரிலிருந்து நிச்சயம் நீரும் உம்முடன் உள்ளோரும் வெறியேற்றப்பட்டுவிடுவீர்.”
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالَ اِنِّیْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِیْنَ ۟ؕ
26.168. லூத் அவர்களிடம் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் செய்யும் உங்களின் இந்தச் செயலை நிச்சயமாக நான் மிகவும் கோபப்பட்டு வெறுக்கிறேன்.”
Tafsiraaɗe Aarabu ɗen:
رَبِّ نَجِّنِیْ وَاَهْلِیْ مِمَّا یَعْمَلُوْنَ ۟
26.169. அவர் தன் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! என்னையும் என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்யும் தீய செயலால் ஏற்படும் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக.”
Tafsiraaɗe Aarabu ɗen:
فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
26.170. நாம் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்து அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் காப்பாற்றினோம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟ۚ
26.171. நிராகரித்தவளாக இருந்த அவருடைய மனைவியைத் தவிர. அவளும் அழிந்து போகும் ஒருத்தியாகிவிட்டாள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟ۚ
26.172. லூத்தும் அவரது குடும்பத்தாரும் (சதூம்) என்ற ஊரிலிருந்து வெளியேறியவுடன் மற்றவர்களை அடியோடு அழித்துவிட்டோம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ— فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟
26.173. நாம் அவர்கள் மீது வானிலிருந்து மழையை பொழியச் செய்வது போல் கல்மழையைப் பொழியச் செய்தோம். தாம் செய்யும் கெட்ட செயலில் தொடர்ந்திருந்தால் அல்லாஹ்வின் வேதனை ஏற்படும் என லூத் எச்சரித்த இவர்கள் மீது பொழிந்த (கல்) மாரி மிகவும் மோசமானதாகும்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ— وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
26.174. நிச்சயமாக மோசமான செயல் செய்த காரணத்தினால் மேலேகூறப்பட்ட லூத்துடைய சமூகத்தின் மீது இறங்கிய வேதனையில் படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை இருக்கின்றது. அவர்களில் பெரும்பாலானோர் நம்பிக்கைகொள்பவர்களாக இல்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
26.175. -தூதரே!- நிச்சயமாக தன் எதிரிகளை தண்டிக்கும் உம் இறைவன் யாவற்றையும் மிகைத்தவன். தன் அடியார்களில் பாவமன்னிப்புக் கோருபவருடன் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Tafsiraaɗe Aarabu ɗen:
كَذَّبَ اَصْحٰبُ لْـَٔیْكَةِ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
26.176. சுருண்ட மரத்தையுடைய ஊர்வாசிகள் தங்களின் தூதர் ஷுஐபை பொய்ப்பித்ததோடு,(ஏனைய) தூதர்களையும் பொய்ப்பித்தார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِذْ قَالَ لَهُمْ شُعَیْبٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
26.177. அவர்களின் நபியான ஷுஐப் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டுவிட்டு அவனை அஞ்ச மாட்டீர்களா?
Tafsiraaɗe Aarabu ɗen:
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
26.178. நிச்சயமாக நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அவனிடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நம்பிக்கையாளனாவேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
Tafsiraaɗe Aarabu ɗen:
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
26.179. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். நான் உங்களுக்கு ஏவியவற்றிலும் தடுத்தவற்றிலும் எனக்குக் கட்டுப்படுங்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
26.180. நான் என் இறைவனிடமிருந்து எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலியோ படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனான அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அல்லாத வேறு யாரிடமும் இல்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
اَوْفُوا الْكَیْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِیْنَ ۟ۚ
26.181. நீங்கள் மக்களுக்கு விற்பனை செய்யும் போது நிறைவாக அளந்துகொடுங்கள்.அளவை நிறுவையில் குறை செய்ய வேண்டாம்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِ ۟ۚ
26.182. நீங்கள் மற்றவர்களுக்கு எடைபோட்டால் சரியான தராசைக் கொண்டு எடைபோடுங்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟ۚ
26.183. மக்களின் உரிமைகளில் குறை செய்யாதீர்கள். பாவங்கள் செய்து பூமியில் குழப்பத்தை அதிகப்படுத்தி விடாதீர்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• اللواط شذوذ عن الفطرة ومنكر عظيم.
1. ஓரினச் சேர்க்கை இயல்புக்கு முரணானதும் பெரும் பாவமுமாகும்.

• من الابتلاء للداعية أن يكون أهل بيته من أصحاب الكفر أو المعاصي.
2. ஒரு அழைப்பாளனின் குடும்பத்தினர்கள் நிராகரிப்போராகவோ பாவிகளாகவோ இருப்பது அவனுக்கான சோதனையாகும்.

• العلاقات الأرضية ما لم يصحبها الإيمان، لا تنفع صاحبها إذا نزل العذاب.
3. நம்பிக்கை இல்லாத இவ்வுலகத் தொடர்புகள் தண்டனை வரும் போது அவனுக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது.

• وجوب وفاء الكيل وحرمة التَّطْفِيف.
4. நிறைவாக அளந்துகொடுப்பது கட்டாயமாகும். அளவில் மோசடி செய்வது தடைசெய்யப்பட்டதாகும்.

 
Firo maanaaji Simoore.: Simoore yimooɓe
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Loowdi firooji ɗi

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddu