Check out the new design

Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Loowdi firooji ɗi


Firo maanaaji Simoore.: Simoore Al-hijri   Aaya.:
قَالَ یٰۤاِبْلِیْسُ مَا لَكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
15.32. ஆதமுக்கு சிரம்பணிய மறுத்த இப்லீஸிடம் அல்லாஹ் கூறினான்: “என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிந்த வானவர்களுடன் சேர்ந்து சிரம்பணியாமல் உன்னைத் தடுத்தது எது?
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
15.33. இப்லீஸ் கர்வத்துடன் கூறினான்: “நீ காய்ந்த மாற்றமடைந்த கருப்பான களிமண்ணால் படைத்த மனிதனுக்கு சிரம்பணிவது எனக்கு உகந்ததல்ல.
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۙ
15.34. அல்லாஹ் இப்லீஸிடம் கூறினான்: “சொர்க்கத்திலிருந்து வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.”
Tafsiraaɗe Aarabu ɗen:
وَّاِنَّ عَلَیْكَ اللَّعْنَةَ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
15.35. உன்மீது சாபம் உண்டு. நீ மறுமை நாள் வரை என் அருளை விட்டும் தூரமாகி விட்டாய்.
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
15.36. இப்லீஸ் கூறினான்: “இறைவா! படைப்புகள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக. என்னை மரணிக்கச் செய்துவிடாதே.”
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
15.37. அவனிடம் அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக தவணைகள் பிற்படுத்தப்பட்டு அவகாசம் வழங்கப்பட்டோரில் நீ உள்ளாய்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
15.38. முதல் சூர் ஊதப்பட்டு படைப்புகள் அனைத்தும் மரணிக்கும் நேரம் வரை.
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاُزَیِّنَنَّ لَهُمْ فِی الْاَرْضِ وَلَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
15.39. இப்லீஸ் கூறினான்: “இறைவா! நீ என்னை வழிகெடுத்ததனால் பூமியில் பாவம் செய்வதை நான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுவேன். நேரான வழியை விட்டும் அவர்கள் அனைவரையும் கெடுப்பேன்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
15.40. ஆயினும் உன்னை வணங்குவதற்காக நீ தேர்ந்தெடுத்துக்கொண்ட உன் அடியார்களைத் தவிர.
Tafsiraaɗe Aarabu ɗen:
قَالَ هٰذَا صِرَاطٌ عَلَیَّ مُسْتَقِیْمٌ ۟
15.41. அல்லாஹ் கூறினான்: இது என் பக்கம் கொண்டு சேர்க்கக்கூடிய நேரான பாதையாகும்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغٰوِیْنَ ۟
15.42. உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர நிச்சயமாக என்னை மட்டுமே உளத் தூய்மையுடன் வணங்கக்கூடிய என் அடியார்களை வழிகெடுப்பதற்கு உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
15.43. இப்லீஸூக்கும் அவனைப் பின்பற்றிய வழிகெட்டவர்கள் அனைவருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
Tafsiraaɗe Aarabu ɗen:
لَهَا سَبْعَةُ اَبْوَابٍ ؕ— لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ ۟۠
15.44. அந்த நரகத்திற்கு ஏழு வாயில்கள் உண்டு. அவற்றின் வழியாக அவர்கள் நுழைவார்கள். ஒவ்வொரு வாயில் வழியாகவும் இப்லீஸைப் பின்பற்றிய குறிப்பிட்ட தொகையினர் நுழைவார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ؕ
15.45. தங்கள் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِیْنَ ۟
15.46. அவர்கள் அவற்றில் நுழையும் போது அவர்களிடம் கூறப்படும்: “துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களாக, பயத்திலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாக நீங்கள் இவற்றில் நுழையுங்கள்.”
Tafsiraaɗe Aarabu ɗen:
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
15.47. அவர்களின் உள்ளங்களிலிருக்கும் குரோதத்தையும் பகைமையையும் நாம் நீக்கி விடுவோம். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் சகோதரர்களாக, ஒருவரையொருவர் பார்த்தவாறு கட்டில்களில் அமர்ந்திருப்பார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
لَا یَمَسُّهُمْ فِیْهَا نَصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِیْنَ ۟
15.48. அங்கு அவர்களுக்கு களைப்பு ஏற்படாது. அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். மாறாக என்றென்றும் அங்கு தங்கியிருப்பார்கள்.
Tafsiraaɗe Aarabu ɗen:
نَبِّئْ عِبَادِیْۤ اَنِّیْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟ۙ
15.49. -தூதரே!- என் அடியார்களுக்கு அறிவித்து விடுவீராக: “நிச்சயமாக நான் அவர்களில் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக் கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தின் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றேன்.”
Tafsiraaɗe Aarabu ɗen:
وَاَنَّ عَذَابِیْ هُوَ الْعَذَابُ الْاَلِیْمُ ۟
15.50. நிச்சயமாக நான் அளிக்கும் தண்டனையே வேதனை மிக்க தண்டனையாகும் என்பதையும் அறிவித்து விடுவீராக. எனவே அவர்கள் என்னுடைய மன்னிப்பைப் பெறுவதற்காக, என் தண்டனையிலிருந்து பாதுகாவல் பெறுவதற்காக பாவமன்னிப்புக் கோரிக் கொள்ளட்டும்.
Tafsiraaɗe Aarabu ɗen:
وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ
15.51. இப்ராஹீமின் விருந்தினர்களாக வருகை தந்த வானவர்களின் தகவலை அவர்களுக்கு அறிவிப்பீராக. அவர்கள் அவருக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறவும் லூத்தின் சமூகத்தினருடைய அழிவைக் கொண்டு அறிவிக்கவும் வந்தவர்களாவர்.
Tafsiraaɗe Aarabu ɗen:
Hino jeyaa e nafooje Aayeeje on ka hello ɗoo.:
• في الآيات دليل على تزاور المتقين واجتماعهم وحسن أدبهم فيما بينهم، في كون كل منهم مقابلًا للآخر لا مستدبرًا له.
1. ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வது, ஒன்று கூடுவது, ஒருவரையொருவர் பின்னோக்காமல், முன்னோக்கி தமக்கு மத்தியில் நல்லொழுக்குத்துடன் நடந்து கொள்வது ஆகியவை இறையச்சமுடையோரின் பண்புகள் என்பதற்கு இந்த வசனங்களில் ஆதாரம் இருக்கிறது.

• ينبغي للعبد أن يكون قلبه دائمًا بين الخوف والرجاء، والرغبة والرهبة.
2. அடியானின் உள்ளம் எப்பொழுதும் பயத்திற்கும், ஆதரவு வைப்பதற்கும், அச்சத்திற்கும், ஆர்வத்திற்கும், மத்தியில் இருப்பது அவசியமாகும்.

• سجد الملائكة لآدم كلهم أجمعون سجود تحية وتكريم إلا إبليس رفض وأبى.
3. வானவர்கள் அனைவரும் ஆதமைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவருக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் சிரம்பணியாமல் மறுத்துவிட்டான்.

• لا سلطان لإبليس على الذين هداهم الله واجتباهم واصطفاهم في أن يلقيهم في ذنب يمنعهم عفو الله.
4. அல்லாஹ் வழிகாட்டி, தேர்ந்தெடுத்தவர்களை அல்லாஹ்வின் மன்னிப்பை விட்டும் தடுக்கும் ஒரு பாவத்தில் வீழ்த்துவதற்கு இப்லீஸுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

 
Firo maanaaji Simoore.: Simoore Al-hijri
Loowdi cimooje ɗe Tonngoode hello ngon
 
Firo maanaaji Alqur'aana Teddunde nden - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Loowdi firooji ɗi

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddu