Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əl-Qəsəs   Ayə:
وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِیِّ اِذْ قَضَیْنَاۤ اِلٰی مُوْسَی الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِیْنَ ۟ۙ
28.44. -தூதரே!- நாம் பிர்அவ்னிடமும் அவனுடைய அவையோரிடமும் அனுப்பும் கட்டளையைப் பிறப்பித்த சமயம் மூஸாவிற்கு மேற்குத் திசையிலிருந்த மலைக்கு அருகில் நீர் இருக்கவில்லை. நீர் இவற்றையெல்லாம் அறிந்து மக்களிடம் கூறுவதற்கு அப்போது அங்கு இருக்கவில்லை. எனவே அவர்களுக்கு நீர் கூறுவதெல்லாம் அல்லாஹ் உமக்கு வஹி அறிவித்ததே.
Ərəbcə təfsirlər:
وَلٰكِنَّاۤ اَنْشَاْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَیْهِمُ الْعُمُرُ ۚ— وَمَا كُنْتَ ثَاوِیًا فِیْۤ اَهْلِ مَدْیَنَ تَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِنَا ۙ— وَلٰكِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟
28.45. ஆயினும் நாம் மூஸாவிற்குப் பிறகு பல சமூகங்களை உருவாக்கினோம். அவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடுமளவு பல்லாண்டுகள் கடந்தன. நீர் நம்முடைய வசனங்களை அவர்களிடம் எடுத்துரைப்பதற்கு நீர் மத்யன்வாசிகளுடன் வசிக்கவில்லை. மாறாக நாம் உம்மை நம் புறத்திலிருந்து தூதராக அனுப்பியுள்ளோம்.மூஸாவின் செய்தியையும் மத்யனில் அவர் தங்கியதையும் நாம் வஹியின் மூலம் உமக்கு அறிவித்தோம். அல்லாஹ் உமக்கு வஹியின் மூலம் அறிவித்ததை நீர் மக்களிடம் அறிவித்தீர்.
Ərəbcə təfsirlər:
وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَیْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
28.46. நாம் மூஸாவை அழைத்து அவருக்கு வஹி அறிவித்த தகவலை நீர் கூறுவதற்கு நீர் தூர் மலைக்கு அருகிலம் இருக்கவில்லை. ஆனால் நாம் உம்மை மக்கள் அனைவருக்கும் உமது இறைவனின் அருளாகவே அனுப்பியுள்ளோம். உமக்கு முன்னர் எச்சரிக்கும் எந்தத் தூதரும் வராத ஒரு சமூகத்தை எச்சரிப்பதற்கே நாம் இவற்றை உமக்கு அறிவித்துள்ளோம். அதனால் அவர்கள் படிப்பினை பெற்று, அல்லாஹ்விடமிருந்து நீர் கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ளலாம்.
Ərəbcə təfsirlər:
وَلَوْلَاۤ اَنْ تُصِیْبَهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَیَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَیْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰیٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
28.47. அவர்களின் நிராகரிப்பு மற்றும் பாவங்களினால் இறைவேதனை அவர்களைத் தாக்கிவிட்டால் தங்களிடம் தூதர்களை வராததை ஆதாரமாகக் காட்டி அவர்கள் கூறுவார்கள்: “நீ எங்களின்பால் ஒரு தூதரை அனுப்பியிருக்கக் கூடாதா? நாங்கள் உன் வசனங்களைப் பின்பற்றி அவற்றின்படி செயல்பட்டிருப்போமே! தங்கள் இறைவனின் கட்டளையின்படி செயல்படும் நம்பிக்கையாளர்களாக நாங்கள் ஆகியிருப்போமே!” இவ்வாறு மட்டும் இல்லையெனில் நாம் அவர்களை உடனடியாகத் தண்டித்திருப்போம். ஆயினும் அவர்களுக்கு நாம் தூதர்களை அனுப்பி காரணத்தை நீக்கும் வரை அதனை அவர்களை விட்டும் தாமதப்படுத்துகின்றோம்.
Ərəbcə təfsirlər:
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِیَ مِثْلَ مَاۤ اُوْتِیَ مُوْسٰی ؕ— اَوَلَمْ یَكْفُرُوْا بِمَاۤ اُوْتِیَ مُوْسٰی مِنْ قَبْلُ ۚ— قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَا ۫— وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ ۟
28.48. குறைஷிகளிடம் முஹம்மது தம் இறைவனிடமிருந்துதூதைக் கொண்டு வந்தபோது அவர்கள் அவரைப் பற்றி யூதர்களிடம் விசாரித்தனர். அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக முஹம்மது தம் இறைவனிடமிருந்து வந்த தூதர் என்பதற்கு அடையாளமாக மூஸாவுக்கு வழங்கப்பட்ட கை, கைத்தடி போன்ற அற்புதங்கள் அவருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டாமா?” தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “இதற்கு முன்னர் மூஸாவுக்கு வழங்கப்பட்டதை யூதர்கள் நிராகரிக்கவில்லையா? அவர்கள் குர்ஆனுக்கும் தவ்ராத்துக்கும் கூறினார்கள்: “ நிச்சயமாக இரண்டுமே ஒன்றையொன்று பலப்படுத்தும் சூனியமே என்று. இன்னும் நிச்சயமாக நாங்கள் அவையிரண்டையும் நிராகரிக்கின்றோம் என்று கூறினார்கள்.”
Ərəbcə təfsirlər:
قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰی مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
28.49. -தூதரே!- நீர் இவர்களிடம் கூறுவீராக: “குர்ஆனையும் தவ்ராத்தையும் சூனியம் என்று கூறும் நீங்கள் உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமிருந்து ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள். அது தவ்ராத்தையும் குர்ஆனையும் விட நேர்வழிகாட்டக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு நிச்சயமாக கொண்டுவந்தால் நான் அதனைப் பின்பற்றுகிறேன்.
Ərəbcə təfsirlər:
فَاِنْ لَّمْ یَسْتَجِیْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا یَتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ ؕ— وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰىهُ بِغَیْرِ هُدًی مِّنَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
28.50. தவ்ராதையும் குர்ஆனையும் விட நேர்வழிமிக்க ஒரு நூலைக் கொண்டுவருவதற்கான உமது அழைப்புக்கு குறைஷிகள் பதிலளிக்கவில்லையெனில் நிச்சயமாக அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் நிராகரிக்கவில்லை, திட்டமாக தங்களின் மன இச்சையின்படியே நிராகரிக்கிறார்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்வீராக. அல்லாஹ்விடமிருந்துள்ள வழிகாட்டுதல் இன்றி தங்களின் மன இச்சையைப் பின்பற்றுபவர்களைவிட வழிகெட்டவர்கள் வேறு யாருமில்லை. நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரித்து தங்களுக்குத்தாங்களே அநீதி இழைத்துக் கொள்ளும், அநியாயக்காரர்களுக்கு நேர்வழிபெற அல்லாஹ் உதவுவதில்லை.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• نفي علم الغيب عن رسول الله صلى الله عليه وسلم إلَّا ما أطلعه الله عليه.
1. அல்லாஹ் அறிவித்ததைத் தவிர வேறு எந்த மறைவான அறிவும் தூதருக்கு இல்லையென மறுத்தல்.

• اندراس العلم بتطاول الزمن.
2. காலம் செல்லச் செல்ல கல்வி சென்றுவிடுகிறது.

• تحدّي الكفار بالإتيان بما هو أهدى من وحي الله إلى رسله.
3. அல்லாஹ் தனது தூதர்களுக்கு வழங்கிய வஹியை விட நேர்வழிமிக்க ஒன்றைக் கொண்டு வருமாறு நிராகரிப்பாளர்களுக்கு சவால் விடுதல்.

• ضلال الكفار بسبب اتباع الهوى، لا بسبب اتباع الدليل.
4. நிராகரிப்பாளர்களின் வழிகேடு மனஇச்சையைப் பின்பற்றியதனால் ஏற்பட்டதேயன்றி ஆதாரத்தைப் பின்பற்றியதால் அல்ல.

 
Mənaların tərcüməsi Surə: əl-Qəsəs
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq