Check out the new design

Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. * - Tərcumənin mündəricatı


Mənaların tərcüməsi Surə: əl-Kəhf   Ayə:
قَالَ اَلَمْ اَقُلْ لَّكَ اِنَّكَ لَنْ تَسْتَطِیْعَ مَعِیَ صَبْرًا ۟
18.75. களிர் மூஸாவிடம் கூறினார்: “நான் செய்யும் செயல்களைப் பார்த்துக் கொண்டு நிச்சயமாக உம்மால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் உம்மிடம் கூறியே உள்ளேன்”
Ərəbcə təfsirlər:
قَالَ اِنْ سَاَلْتُكَ عَنْ شَیْ بَعْدَهَا فَلَا تُصٰحِبْنِیْ ۚ— قَدْ بَلَغْتَ مِنْ لَّدُنِّیْ عُذْرًا ۟
18.76. மூஸா கூறினார்: “இதற்குப் பிறகும் நான் உம்மிடம் ஏதேனும் விஷயத்தைக்குறித்துக் கேட்டால் என்னைப் பிரிந்துவிடவும். ஏனெனில் நான் உமது கட்டளைக்கு இரு முறைகள் மாற்றம் செய்துள்ளதனால் நீர் என்னுடனான தொடர்பை விட்டுவிடுவதற்கு தக்க காரணத்தைப் பெற்றுள்ளீர்.”
Ərəbcə təfsirlər:
فَانْطَلَقَا ۫— حَتّٰۤی اِذَاۤ اَتَیَاۤ اَهْلَ قَرْیَةِ ١سْتَطْعَمَاۤ اَهْلَهَا فَاَبَوْا اَنْ یُّضَیِّفُوْهُمَا فَوَجَدَا فِیْهَا جِدَارًا یُّرِیْدُ اَنْ یَّنْقَضَّ فَاَقَامَهٗ ؕ— قَالَ لَوْ شِئْتَ لَتَّخَذْتَ عَلَیْهِ اَجْرًا ۟
18.77. அவர்களிருவரும் நடந்துசென்றனர். ஓர் ஊரை அடைந்ததும் அவ்வூர்வாசிகளிடம் உணவு கேட்டார்கள். அவர்கள், இருவருக்கும் உணவளித்து, விருந்தினர் உரிமையை நிறைவேற்ற மறுத்துவிட்டனர். அங்கு இடிந்துவிழுவதற்குத் தயாராக இருந்த ஒரு சரிந்த சுவரைக் கண்டார்கள். களிர் அந்த சுவரைச் சரிசெய்து நிறுத்தினார். அப்போது மூஸா, “அவர்கள் நமக்கு விருந்தளிக்க மறுத்த பிறகு, நமது உணவுத் தேவைக்காக, அதனை சீர்செய்வதற்கு ஏதாவது கூலியைப் பெற நீர் விரும்பியிருந்தால் அதனை நீர் எடுத்திருக்கலாமே!” என்றார்.
Ərəbcə təfsirlər:
قَالَ هٰذَا فِرَاقُ بَیْنِیْ وَبَیْنِكَ ۚ— سَاُنَبِّئُكَ بِتَاْوِیْلِ مَا لَمْ تَسْتَطِعْ عَّلَیْهِ صَبْرًا ۟
18.78. அதற்கு களிர் மூஸாவிடம் கூறினார்: “இச்சுவரை சரிசெய்ததற்கு நான் கூலி பெறாததற்கு நீர் செய்த இந்த ஆட்சேபனையே உமக்கும் எனக்குமுள்ள பிரிவாகும். உம்மால் பார்த்துக்கொண்டு பொறுத்துக்கொள்ள முடியாத என் செயல்களுக்கான விளக்கத்தை நான் உமக்கு தற்போது வழங்குகின்றேன்.
Ərəbcə təfsirlər:
اَمَّا السَّفِیْنَةُ فَكَانَتْ لِمَسٰكِیْنَ یَعْمَلُوْنَ فِی الْبَحْرِ فَاَرَدْتُّ اَنْ اَعِیْبَهَا وَكَانَ وَرَآءَهُمْ مَّلِكٌ یَّاْخُذُ كُلَّ سَفِیْنَةٍ غَصْبًا ۟
18.79. நான் துளையிட்டுவிட்டதாக நீர் ஆட்சேபனை செய்த கப்பலின் விவகாரம் என்னவென்றால், அது கடலில் வேலைசெய்துகொண்டிருந்த சில ஏழைகளுக்குரியது. அவர்களால் அதனை பாதுகாக்க முடியாது. நான் அதிலே ஏதேனும் செய்து அதனைக் குறையுடைய கப்பலாக ஆக்க நாடினேன். ஏனெனில் அவர்களுக்கு முன்னால் குறையுடைய கப்பல்களை விட்டுவிட்டு நல்ல கப்பல்களை அவர்களிடம் இருந்து நிர்பந்தமாக அபகரித்துக் கொள்ளும் ஓர் அரசன் உள்ளான்.
Ərəbcə təfsirlər:
وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوٰهُ مُؤْمِنَیْنِ فَخَشِیْنَاۤ اَنْ یُّرْهِقَهُمَا طُغْیَانًا وَّكُفْرًا ۟ۚ
18.80. நான் கொன்றுவிட்டதாக நீர் ஆட்சேபனை செய்த சிறுவனின் விவகாரம் என்னவென்றால், அந்த சிறுவனின் தாய், தந்தையர் நம்பிக்கையாளர்களாக இருந்தார்கள். அவனோ பின்னாளில் நிராகரிப்பாளனாக வருவான் என்பதை அல்லாஹ் அறிந்திருந்தான். அவர்களுக்கு அவன் மீதுள்ள அதீத அன்பின் காரணமாகவோ, தேவையின் காரணமாகவோ அவர்களை அவன் நிராகரிப்பில் தள்ளிவிடுவானோ என்று நாம் அஞ்சினோம்.
Ərəbcə təfsirlər:
فَاَرَدْنَاۤ اَنْ یُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَیْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا ۟
18.81. ஆகவே அல்லாஹ் அவர்களுக்கு அவனைவிட சிறந்த மார்க்க பக்தியுள்ள, நல்ல, பாவங்களிலிருந்து தூய்மையான, அவர்கள் மீது அன்பு செலுத்தக்கூடிய பிள்ளையை மாற்றாக அளிக்க வேண்டும் என்று நாம் நாடினோம்.
Ərəbcə təfsirlər:
وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَیْنِ یَتِیْمَیْنِ فِی الْمَدِیْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًا ۚ— فَاَرَادَ رَبُّكَ اَنْ یَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَیَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖۗ— رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۚ— وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِیْ ؕ— ذٰلِكَ تَاْوِیْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَیْهِ صَبْرًا ۟ؕ۠
18.82. நான் சரிசெய்ததற்காக ஆட்சேபனை செய்த சுவரின் விவகாரம் என்னவென்றால், அது நாம் சென்ற ஊரில் தந்தையை இழந்த இரு அநாதைச் சிறுவர்களுக்கு உரியது. அவர்களின் தந்தை அந்த சுவருக்குக் கீழே அவர்களுக்காக செல்வத்தைப் புதைத்து வைத்துள்ளார். அவர்களின் தந்தை நல்லவராக இருந்தார். -மூஸாவே!- அவர்கள் பக்குவ வயதை அடைந்து பெரியவர்களானதும் புதைக்கப்பட்ட செல்வத்தை அதற்குக் கீழிருந்து எடுக்க வேண்டும் என்று உம் இறைவன் நாடினான். தற்போது அந்த சுவர் விழுந்துவிட்டால் அந்த செல்வம் வெளிப்பட்டு வீணாகிவிடும். அவர்கள் மீதுள்ள கருணையால் உம் இறைவன் செய்த ஏற்பாடே இதுவாகும். நான் சுயமாக எதையும் செய்யவில்லை. இதுதான் உம்மால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களுக்கான விளக்கமாகும்.
Ərəbcə təfsirlər:
وَیَسْـَٔلُوْنَكَ عَنْ ذِی الْقَرْنَیْنِ ؕ— قُلْ سَاَتْلُوْا عَلَیْكُمْ مِّنْهُ ذِكْرًا ۟ؕ
18.83. -தூதரே!- உம்மை சோதிக்கும்பொருட்டு இணைவைப்பாளர்களும், யூதர்களும் துல்கர்னைனைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவருடைய வரலாற்றில் நீங்கள் படிப்பினை பெறத்தக்க ஒரு பகுதியை நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
Ərəbcə təfsirlər:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• وجوب التأني والتثبت وعدم المبادرة إلى الحكم على الشيء.
1. நிதானம், உறுதிப்படுத்திக்கொள்ளல், ஒரு விடயத்துக்கு அவசரப்பட்டுத் தீர்ப்பளிக்காமல் இருத்தல் என்பன அவசியமான பண்புகளாகும்.

• أن الأمور تجري أحكامها على ظاهرها، وتُعَلق بها الأحكام الدنيوية في الأموال والدماء وغيرها.
2. வெளிரங்கமானவற்றுக்கே சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். சொத்துகளிலும் உயிர்களிலும் ஏனையவற்றிலும் வெளிரங்கத்தை வைத்தே உலக சட்டங்கள் தொடர்புபடுத்தப்படும்.

• يُدْفَع الشر الكبير بارتكاب الشر الصغير، ويُرَاعَى أكبر المصلحتين بتفويت أدناهما.
3. சிறிய தீங்கைச் செய்து பெரிய தீங்கு நீக்கப்படும். இரு நலவுகளில் குறைந்த நலனை இழந்து பெரிய நலனையே கவனத்தில் கொள்ளப்படும்.

• ينبغي للصاحب ألا يفارق صاحبه ويترك صحبته حتى يُعْتِبَه ويُعْذِر منه.
4. நண்பன் தனது நண்பனை கண்டித்து பல சந்தர்ப்பங்கள் வழங்குவதற்கு முன் அவனையோ அவனது சகவாசத்தையோ விட்டு விலகுவது உகந்ததல்ல.

• استعمال الأدب مع الله تعالى في الألفاظ بنسبة الخير إليه وعدم نسبة الشر إليه .
5. வார்த்தைகளிலும் கூட அல்லாஹ்வுடன் ஒழுக்கத்தைப் பேண வேண்டும். நன்மைகளை அவன் பக்கம் இணைக்க வேண்டும். தீமைகளை அவன் பக்கம் இணைக்கக் கூடாது.

• أن العبد الصالح يحفظه الله في نفسه وفي ذريته.
6. நல்லடியானின் உயிரையும் அவனது சந்ததியையும் அல்லாஹ் பாதுகாப்பான்.

 
Mənaların tərcüməsi Surə: əl-Kəhf
Surələrin mündəricatı Səhifənin rəqəmi
 
Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi. - Tərcumənin mündəricatı

Tərcümə "Quran araşdırmaları Təfsir Mərkəzi" tərəfindən yayımlanmışdır.

Bağlamaq