للإطلاع على الموقع بحلته الجديدة

ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: يوسف   آية:
وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ— مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ— ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
12.38. நான் என் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றினேன். அது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கும் மார்க்கமாகும். அவன் மாத்திரமே வணங்குவதற்குத் தகுதியானவனாக இருக்கும் போது அவனுக்கு இணையாக யாரையும் ஆக்குவது எங்களுக்கு உகந்ததல்ல. நானும் எனது மூதாதையர்களும் ஏற்றுள்ள தவ்ஹீதும் நம்பிக்கையும் அவன் எங்கள் மீது பொழிந்த அருளாகும். அவன் மனிதர்கள் அனைவரின்பாலும் தூதர்களை ஏகத்துவத்தைக் கொடுத்து அனுப்பி அவர்கள் மீது அருள் புரிந்துள்ளான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில்லை. மாறாக நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
التفاسير العربية:
یٰصَاحِبَیِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَیْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟ؕ
12.39. பின்னர் யூசுஃப் சிறையில் இருந்த இரு இளைஞர்களையும் பார்த்துக் கூறினார்: “பல கடவுள்களை வணங்குவது சிறந்ததா? அல்லது தன்னை யாரும் அடக்கி ஆளாமல் மற்றவர்களை அடக்கியாளும், எவ்வித இணையுமற்ற அல்லாஹ் ஒருவனையே வணங்குவது சிறந்ததா?”
التفاسير العربية:
مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ— اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ— اَمَرَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ ؕ— ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
12.40. நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக தாமாகவே பெயர் சூட்டிக்கொண்டவைகளையே நீங்கள் வணங்குகிறீர்கள். வணக்கத்தில் அவைகளுக்கு எவ்வித பங்கும் இல்லை. அந்த பெயர்கள் சரியானவை என்பதற்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. எல்லா படைப்புகளின் விஷயத்திலும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துமாறு ஏவியுள்ளான். அவனுக்கு யாரையும் இணையாக்குவதை தடைசெய்துள்ளான். இந்த ஓரிறைக்கொள்கையே எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமாகும். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிவதில்லை. எனவேதான் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அவனுடைய படைப்புகளில் சிலவற்றை வணங்குகிறார்கள்.
التفاسير العربية:
یٰصَاحِبَیِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَیَسْقِیْ رَبَّهٗ خَمْرًا ۚ— وَاَمَّا الْاٰخَرُ فَیُصْلَبُ فَتَاْكُلُ الطَّیْرُ مِنْ رَّاْسِهٖ ؕ— قُضِیَ الْاَمْرُ الَّذِیْ فِیْهِ تَسْتَفْتِیٰنِ ۟ؕ
12.41. சிறையில் இருக்கும் எனது இரு தோழர்களே! மதுபானம் தயாரிக்க திராட்சை ரசம் பிழிவதாக கனவு கண்டவர் சிறையிலிருந்து விடுபட்டு தம் பணிக்குத் திரும்பி, அரசனுக்கு மது ஊற்றிக் கொடுப்பார். தம் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு, அதை பறவைகள் கொத்தித் தின்பதாக கனவு கண்டவர் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்படுவார். அவர் தலை மாமிசத்தை பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் தீர்ப்புக் கூறுமாறு கேட்ட விடயம் தீர்மானிக்கப்பட்டு முடிந்து விட்டது. சந்தேகமின்றி இது நிகழ்ந்தே தீரும்.
التفاسير العربية:
وَقَالَ لِلَّذِیْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِیْ عِنْدَ رَبِّكَ ؗ— فَاَنْسٰىهُ الشَّیْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِی السِّجْنِ بِضْعَ سِنِیْنَ ۟۠
12.42. இருவரில் விடுதலையடைவார் என்று எண்ணியவரிடம் -அரசனுக்கு மது ஊற்றிக்கொடுப்பவர்- யூஸுஃப் கூறினார்: “அரசனிடம் என்னைப் பற்றி எடுத்துக் கூறுவீராக. அதனால் அவர் சிறையிலிருந்து என்னை விடுவிக்கலாம். அரசனிடம் யூஸுஃபைக் குறித்துக் கூறுவதை விட்டும் ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான். எனவே அதன் பின்னர் யூஸுஃப் பல வருடங்கள் சிறையில் கழித்தார்.
التفاسير العربية:
وَقَالَ الْمَلِكُ اِنِّیْۤ اَرٰی سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ یَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ؕ— یٰۤاَیُّهَا الْمَلَاُ اَفْتُوْنِیْ فِیْ رُءْیَایَ اِنْ كُنْتُمْ لِلرُّءْیَا تَعْبُرُوْنَ ۟
12.43. அரசன் கூறினான்: “நான் கனவில் ஏழு கொழுத்த பசுமாடுகளை ஏழு மெலிந்த பசுமாடுகள் தின்றுகொண்டிருப்பதையும் ஏழு பசுமையான கதிர்களையும் ஏழு காய்ந்த கதிர்களையும் கண்டேன். தலைவர்களே, கண்ணியவான்களே! நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் அறிந்தவர்களாக இருந்தால் நான் கண்ட இந்த கனவிற்கு விளக்கம் அளியுங்கள்.”
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• وجوب اتباع ملة إبراهيم، والبراءة من الشرك وأهله.
1. இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவதும் இணைவைப்பையும், இணைவைப்பாளர்களையும் விட்டு நீங்கி விடுவதும் கட்டாயமாகும்.

• في قوله:﴿ءَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ ...﴾ دليل على أن هؤلاء المصريين كانوا أصحاب ديانة سماوية لكنهم أهل إشراك.
2. (சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது யாவரையும் அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?) என்ற வசனம் இந்த எகிப்தியர்கள் வானுலக மார்க்கத்தைச் சார்ந்தவர்கள ஆனால் இணைவைப்பாளர்களாக காணப்பட்டனர் என்பதற்கான ஆதாரமாகும்.

• كلُّ الآلهة التي تُعبد من دون الله ما هي إلا أسماء على غير مسميات، ليس لها في الألوهية نصيب.
3. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் தெய்வங்கள் அனைத்தும் வெறும் பெயர்களே அன்றி வேறில்லை. அவை வணக்கத்திற்கு சிறிதும் தகுதியானவை அல்ல.

• استغلال المناسبات للدعوة إلى الله، كما استغلها يوسف عليه السلام في السجن.
4. யூஸுஃப் (அலை) அவர்கள் சிறையில் இருந்து பயன்படுத்திக் கொண்டது போல சந்தர்ப்ப சூழ்நிலைகளை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 
ترجمة معاني سورة: يوسف
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

صادرة عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق