Check out the new design

የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማውጫ


የመልዕክት ትርጉም አንቀፅ: (1) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ

அல்பகரா

ከሱራዋ ጥቅል ሀሳብ መካከል:
الأمر بتحقيق الخلافة في الأرض بإقامة الإسلام، والاستسلام لله، والتحذير من حال بني إسرائيل.
இஸ்லாத்தை நிலைநாட்டி அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் மூலம் பூமியில் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுமாறு ஏவுதலும், பனூ இஸ்ரவேலர்களின் நிலமையை விட்டு எச்சரித்தலும்

الٓمّٓ ۟ۚ
2.1. الم - குர்ஆனின் சில அத்தியாயங்கள் இவ்வகையான எழுத்துக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அறபு மொழியிலுள்ள எழுத்துக்களாகும். இவ்வாறு அலிஃப், பா, தா என்று தனித்து இடம்பெறும்போது அவற்றுக்குப் பொருள் கிடையாது. ஆனால், குர்ஆனில் எதுவும் நோக்கமின்றிக் கூறப்பட்டிருக்காது என்பதால் இவ்வாறான எழுத்துகள் இடம்பெறுவதற்கும் ஒரு நோக்கம் உண்டு. அறபிகள் பேசுவதற்குப் பயன்படுத்துகிற அவர்களுக்குத் தெரிந்த அதே எழுத்துகளின் மூலம் அமைந்த குர்ஆனைக் கொண்டு சவால் விடுவதே அந்த நோக்கமாகும். அதனால்தான் பெரும்பாலும் இந்த எழுத்துகளைக் குறிப்பிட்ட பின்னர் குர்ஆனைப் பற்றியே பேசப்படுகிறது. இந்த அத்தியாயத்திலும் அவ்வாறே வந்துள்ளது.
ዓረብኛ ተፍሲሮች:
በዚህ ገፅ ያሉት አንቀፆች ከሚያስተላልፉት ጠቃሚ መልዕክት መካከል:
• الثقة المطلقة في نفي الرَّيب دليل على أنه من عند الله؛ إذ لا يمكن لمخلوق أن يدعي ذلك في كلامه.
1. முழு நம்பிக்கையுடன் குர்ஆனில் சந்தேகமில்லை என மறுத்திருப்பது, அது அல்லாஹ்விடமிருந்து வந்த வேதமே என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், எந்தவொரு படைப்பினமும் தனது வார்த்தையில் இந்தளவு நம்பகத்தன்மையை வாதிட முடியாது.

• لا ينتفع بما في القرآن الكريم من الهدايات العظيمة إلا المتقون لله تعالى المعظِّمون له.
2. அல்லாஹ்வுக்குப் பயந்து அவனைக் கண்ணியப்படுத்துவோர் மட்டுமே குர்ஆன் கூறக்கூடிய மகத்தான போதனைகளிலிருந்து பலனடைவார்கள்.

• من أعظم مراتب الإيمانِ الإيمانُ بالغيب؛ لأنه يتضمن التسليم لله تعالى في كل ما تفرد بعلمه من الغيب، ولرسوله بما أخبر عنه سبحانه.
3. அல்லாஹ் அறிவித்த மறைவான விஷயங்களை நம்புவது ஈமானின் மிக உயர்ந்த படித்தரங்களில் ஒன்றாகும். ஏனெனில், இது அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான விஷயங்கள் அனைத்திலும் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதாகும். அத்துடன், அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர் அறிவித்த மறைவான விஷயங்களில் அவருக்குக் கட்டுப்படுவதாகவும் அமையும்.

• كثيرًا ما يقرن الله تعالى بين الصلاة والزكاة؛ لأنَّ الصلاة إخلاص للمعبود، والزكاة إحسان للعبيد، وهما عنوان السعادة والنجاة.
4. பெரும்பாலும் அல்லாஹ் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்தே கூறுகின்றான். ஏனெனில், தொழுகை வணக்கத்திற்குரியவனுக்கு மனத்தூய்மையுடன் நடப்பதாகும்; ஸகாத் அடியார்களுக்கு உபகாரம் செய்வதாகும். இந்த இரண்டுமே ஈடேற்றம் மற்றும் பாதுகாப்பின் காரணிகளாகும்.

• الإيمان بالله تعالى وعمل الصالحات يورثان الهداية والتوفيق في الدنيا، والفوز والفلاح في الأُخرى.
5. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்கள் புரிவதும் இவ்வுலகில் நேர்வழியையும் பாக்கியத்தையும் வழங்குகின்றன. அத்துடன், மறுமையில் ஈடேற்றத்தையும் வெற்றியையும் பெற்றுத் தருகின்றன.

 
የመልዕክት ትርጉም አንቀፅ: (1) ሱራ (ምዕራፍ): አል-በቀራህ
የሱራዎች ማውጫ ገፅ ቁጥር
 
የተከበረው ቁርአን መልዕክተ ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማውጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

ለመዝጋት